ஜோதிகா குறித்து கார்த்தி
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தியும், ஜோதிகாவும் தம்பி, அக்காள் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் தம்பி.
சத்யராஜ், இளவரசு, சவுகார் ஜானகி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கார்த்தி, “தம்பி படத்தில் அண்ணி ஜோதிகாவுடன் நடித்தது உற்சாகமான அனுபவமாக இருந்தது. இந்த படம் குடும்ப கதையை மையப்படுத்தி உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது. ‘
பையா’ படத்தை போன்று தனித்தன்மையான, வித்தியாசமான கதையாகவும் நடிப்பிற்கு வாய்ப்புள்ள படமாகவும் தம்பி அமைந்துள்ளது.
அண்ணி ஜோதிகா படப்பிடிப்பிற்கு வருவதற்கு முன்பே அன்றைக்கு உடுத்த வேண்டிய உடைகள், சிகை அலங்காரம் என்று முன்பே திட்டமிட்டு தயார் செய்து வைத்துவிடுவார். என்ன வசனம் பேசவேண்டும்? என்பதை முன்பே வாங்கி மனப்பாடம் செய்துவிட்டு படப்பிடிப்பு தளத்திற்கு தயாராவே வருவார்” என குறிப்பிட்டுள்ளார்.