நான் அரசியல்வாதி அல்ல, ஆன்மிகத் தலைவன்: டிரம்புடன் விவாதிக்க திருத்தந்தை மறுப்பு
அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் பொது விவாதத்தில் ஈடுபடத் தனக்குத் துளியும் விருப்பமில்லை என்று திருத்தந்தை லியோ தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்கப் பயணத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் ஒரு ஆன்மிகத் தலைவரே தவிர அரசியல்வாதி அல்ல என்பதைத் தெளிவுபடுத்தினார்.
டிரம்ப் தனது கருத்துக்களை விமர்சித்த போதிலும், தான் தொடர்ந்து அமைதியையே போதிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போது 11 நாள் ஆப்பிரிக்கப் பயணத்தில் உள்ள திருத்தந்தை லியோ, அங்கு நிலவும் மோதல்களைத் தீர்க்க அமைதிப் பேச்சுவார்த்தையே ஒரே வழி என்று வலியுறுத்தி வருகிறார்.
