Main Menu

துயர் பகிர்வோம் – திரு. கந்தையா யோகநாதன் (16/04/2022)

தாயகத்தில் பூநகரியை பிறப்பிடமாகவும், மட்டுவில்லை வசிப்பிடமாகவும் உகண்டாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா யோகநாதன் அவர்கள்
14ம் திகதி ஏப்ரல் மாதம் வியாழக்கிழமை அன்று காலமானார் என்பதனை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், பாலசுப்பிரமணியம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்
காலஞ்சென்ற ஸ்ரீகலாவின் அன்பு கணவரும், நேருதாஸன், பாரதிதாஸன் , ஸ்ரீகாந்தன், அற்புதமலர் (கனடா), கமலாதேவி, யோகேஸ்வரி (பிரான்ஸ் தமிழ் ஒலி வானொலியின் அன்பு நேயர்) ஆகியோரின் அன்பு சகோதரரும், ரமணன்,Dr ஜெகதாம்பாள் (ஜெகா) ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பரகள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவுத் துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்கிறது

தகவல்: அன்பு சகோதரி யோகேஸ்வரி குடும்பம் France.
தொலைபேசி: 01 43 68 78 93 .

பகிரவும்...