Day: April 16, 2022
போராட்டங்கள் நடுநிலைமையாக காணப்பட்டால் எதிர்காலத்திற்கு சிறந்த விடயம் – துமிந்த திசநாயக்க
காலிமுகத்திடலில் இடம்பெறும் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடுநிலைமையானவையாக காணப்பட்டால் நாட்டின் எதிர்காலம் சிறப்பானதாக காணப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது. அரசாங்கத்துக்கு எதிராக கடந்த 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று (சனிக்கிழமை ) 8 ஆவது நாளாகவும்மேலும் படிக்க...
ஜெட் விமானத்தில் நாட்டை விட்டு பசில் வெளியேறவில்லை? – விமான நிலையம் உறுதிப்படுத்தியது !
பசில் ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை இரத்மலானை கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தனியார் ஜெட் விமானத்தில் நாட்டை விட்டு வெளியேறினார் என்ற செய்திகளை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் மறுத்துள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் பொருளாதாரத்திற்கு உறுதுணையாகமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு. கந்தையா யோகநாதன் (16/04/2022)
தாயகத்தில் பூநகரியை பிறப்பிடமாகவும், மட்டுவில்லை வசிப்பிடமாகவும் உகண்டாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா யோகநாதன் அவர்கள் 14ம் திகதி ஏப்ரல் மாதம் வியாழக்கிழமை அன்று காலமானார் என்பதனை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,மேலும் படிக்க...
மக்ரோனுக்கு ஆதரவளிக்கும் முன்னாள் ஜனாதிபதி François Hollande
முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து (François Hollande) இரண்டாம் சுற்று தேர்தலில் இம்மானுவல் மக்ரோனுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை இரவு TF1 தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த அவர், இதனை தெரிவித்தார். ‘இரண்டாம் சுற்று தேர்தலில் நான் மக்ரோனுக்கே வாக்களிப்பேன். Marine Leமேலும் படிக்க...
உக்ரைன் தலைநகரை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த 900க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுப்பு
பெரும்பாலான பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் சிலர் தூக்கிலிடப்பட்டுள்ளதாகவும், போலீசார் தெரிவித்துள்ளனர். உக்ரைனில் போரில் இறந்தவர்களின் உடல்கள் மீட்புகீவ்:உக்ரைன் மீதான ரஷியா தொடுத்துள்ள போர் 52வது நாளாக நீடிக்கும் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்வை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 900க்கும் மேற்பட்டமேலும் படிக்க...
படையெடுப்பு தொடங்கியதில் இருந்து 3,000 உக்ரைன் துருப்புக்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் அறிவிப்பு
ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து இதுவரை 3 ஆயிரம் உக்ரேனிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும் 10 ஆயிரம் பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் உக்ரைன் ஜனாதிபதி கூறியுள்ளார். இதேவேளை நாட்டில்மேலும் படிக்க...
மதுரையில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிர் இழந்தோர் குடும்பத்திற்கு நிதியுதவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
மதுரை சித்திரைத் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- மதுரையில் இன்று காலை கள்ளழகர் வைகையாற்றில் இறங்கிய நிகழ்வைக் காணும் பொருட்டு, தமிழகத்தின் பல்வேறுமேலும் படிக்க...
சித்ரா பவுர்ணமி: திருவண்ணா மலையில் லட்சக் கணக்கான பக்தர்கள் கிரிவலம்
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக சித்ரா பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். 12 மாதங்களில் வரும் பவுர்ணமிகளில்மேலும் படிக்க...
ஆட்சி மாற்றம் தேவையில்லை என்ற கஜேந்திரகுமார் இன்று நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்து, சந்தர்ப்பவாத நடவடிக்கை – சுரேஷ் பிரேமச்சந்திரன்
ஆட்சி மாற்றம் தேவையில்லை அதனால் தமிழ் மக்களுக்கு எதுவும் நடக்கப் போவதில்லை என கூறியவர்கள் இன்று ஆட்சி மாற்றம்தான் வேண்டும் என கூறுவது சந்தர்ப்பவாத நடவடிக்கை என சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். மனித உரிமை பேரவையில் தமிழர்கள் பிரச்சினை குறித்துமேலும் படிக்க...
கொழும்பு பங்குச் சந்தை மூடப்படுகின்றது
கொழும்பு பங்குச் சந்தை தற்காலிகமாக ஐந்து நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை (18) முதல் 5 நாட்களுக்கு கொழும்பு பங்குச் சந்தை மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகமேலும் படிக்க...
காலிமுகத்திடல் போராட்டத்திற்கு இடையூறு விளைவிக்காதீர்கள் – சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிகை
மக்களின் அமைதியான போராட்டத்தை சீர்குலைக்கும் முயற்சி நாட்டிற்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரித்துள்ளது. எனவே இவ்வாறான நடவடிக்கைகள் எடுப்பதைத் தவிர்க்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அச்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. காலி முகத்திடலுக்கு அருகாமையில் குவிக்கப்பட்ட பல பொலிஸ்மேலும் படிக்க...