Main Menu

துயர் பகிர்வோம் – செல்வன்.யோகானந்தன் கீர்த்தி (03/01/2021)

தாயகத்தில் சரசாலை மத்தி சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட யோகானந்தன் (முன்னாள் விசேட சேவை அலுவலர் தற்போது பிரான்ஸ்) ஆனந்தலீலா தம்பதியினரின் செல்வப்புதல்வன் கீர்த்தி இன்று (01.01.2021) லண்டனில் காலமானார்.

அன்னார் கீர்த்திகா, காலம் சென்ற கிரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் காலம் சென்றவர்களான இராசையா (ஓய்வு நிலை ஆசிரியர்) இராசசிரோன்மணியின் பாசமிகு பேரனும், சிவகௌரி (ஓய்வு நிலை ஆசிரியர் சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலை) ஜெயகௌரி, ஞானகௌரி, விசாகன் (ஆய்வுகூட உதவியாளர் C.H.C) காந்திகுமார் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மருமகனும் சயந்தவி, பவீசணன், மாதங்கி (C.H.C) ஆகியோரின் மைத்துனரும் காலம் சென்றவர்களான தம்பையா( ஓய்வு நிலை லிகிதர்) விஸ்வநாதன் (ஓய்வு நிலை அதிபர்) மற்றும் பரமேஸ்வரியின் பேரனும் காலம் சென்றவர்களான சிவானந்தன் , நித்தியானந்தன்,குணசேகரன் , சத்தியானந்தன் மற்றும் தயானந்தன் (கனடா) ஜெகராஜசேகரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும் கலா வாணி தர்மலிங்கம் (அமெரிக்கா) கலாராணி ஆகியோரின் பாசமிகு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

இத் துயர் பகிர்வில் TRTதமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதோடு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

பகிரவும்...