Main Menu

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் கடுமை ஆக்கப்படும்

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

புதியவகை கொரோனா தொற்று காரணமாக பிரித்தானியாவில் அதிகளவிலான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிபிசி யில் இடம்பெற்ற விவாத நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், அடுத்த சில வாரங்களில் அமுல் உள்ள நடவடிக்கைகள் குறித்து மீளாய்வு செய்யப்படும் என கூறினார்.

இதேவேளை தற்போதைய நிலை கடுமையானதாக உள்ளதாகவும் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...