Main Menu

சுவிஸில் நீரில் மூழ்கி யாழ். இளைஞன் உயிரிழப்பு!

சுவிஸில் நீரில் மூழ்கி யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுவிஸின் சொலத்தூண் பகுதியில் உள்ள ஆற்றில் மூழ்கியே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பாற்பண்ணை பகுதியை சேர்ந்த எஸ்.சயந்தன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சொலத்தூண் பகுதியில் உள்ள ஆறு ஒன்றின் பாலத்திற்கு மேலாக நண்பர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்த வேளை கால் இடறி ஆற்றில் வீழ்ந்து குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் இதுகுறித்த விசாரணைகளை சுவிஸ் அதிகாரிகள் முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

பகிரவும்...