Main Menu

சுவிட்சர்லாந்தில் 114 சிறார்களை துஸ்பிரயோகம் செய்த மருத்துவர்

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் தம்மிடம் சிகிச்சை பெறவந்த 114 சிறார்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கிய மருத்துவர் சிக்கியுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, பெர்ன் நீதிமன்றத்தால் 13 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டார்.

ஆனால் அவரது நடவடிக்கைகளை கண்காணிக்க வலியுறுத்திய நீதிமன்றம், குறிப்பிட்ட அளவீடுகளை மீறினால், அந்த மருத்துவரை கைது செய்யலாம் என தீர்ப்பளித்திருந்தது.

இந்த நிலையில் வியாழனன்று அவரது நடவடிக்கை காரணமாக குறித்த மருத்துவரை கைது செய்ய நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போது 62 வயதான குறித்த நபர் மீது சுமார் 114 சிறார்களை துஸ்பிரயோகம் செய்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளதாக கூறும் நீதிமன்றம்,

மேலும் 33 வழக்குகள் அவரது பெயரில் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. வழக்கு நிரூபணமான 2014 ஆம் ஆண்டு, அவரை கைது செய்வதற்கான கால அவகாசம் கோரப்பட்டிருந்தது.

தற்போது உளவியல் நிபுணர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில், அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...