Main Menu

ரயிலிலிருந்து தவறி வீழ்ந்து வெளிநாட்டுப் பெண் காயம் ; ஹப்புத்தளையில் சம்பவம்

மலையக ரயில் பாதையில் கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் இருந்து தவறி வீழ்ந்து வெளிநாட்டுப் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர் மொரிஷியஸ் நாட்டைச் சேர்ந்த 32 வயது பெண்ணாவார்.

இவர் பட்டிப்பொல மற்றும் ஓஹிய ஆகிய பகுதிகளுக்கு இடையில் ரயிலில் இருந்து தவறி வீழ்ந்து காயமடைந்துள்ள நிலையில், அம்பியூலன்ஸ் மூலம் தியத்தலாவை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஹப்புத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பகிரவும்...