சட்டசபை தேர்தல்: அ.தி.மு.க. – தே.மு.தி.க. கட்சிகள் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை!
அ.தி.மு.க. – தே.மு.தி.க. கட்சிகள் இடையே இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அ.தி.மு.க. – தே.மு.தி.க. கட்சிகள் இடையே சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் நிலையில் இன்று இடம்பெறும் ஆலோசனையில் இறுதி தீர்மானம் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர்கள் மற்றும் தே.மு.தி.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொகுதி எண்ணிக்கை தொடர்பாக இரு தரப்பிடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.