கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான எழுவர் குணமடைந்தனர்!
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 5 பேரும், டெல்லி, ராஜஸ்தானில் இருந்து தலா ஒருவரும் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஏற்கனவே கேரளாவில் மூவர் குறித்த வைரஸ் தாக்கத்தில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இதன் மூலம் கொரோனா பாதித்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இந்தியாவில் இதுவரை 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.