Day: March 14, 2020
கொரோனா அச்சுறுத்தல் இந்தியாவில் தேசியப் பேரிடராக அறிவிப்பு!
இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தைத் தேசியப் பேரிடராக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இதேவேளை, இந்தியாவில் இன்றைய நிலைவரப்படி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் அனைவரும் வைத்தியசாலைகளில் தனிப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுமேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை- வர்த்தக சங்கம் அறிவிப்பு
யாழ்ப்பாணத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை. போதுமான அளவு பொருட்கள் கையிருப்பில் உள்ளதால் தங்கு தடையின்றி பொருட்கள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்ப்பாண வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பாக பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
இலங்கையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை: மக்களுக்கான அறிவிப்பு!
இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் இன்றைய நிலைவரப்படி 10 பேர் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, இந்து மக்கள் முடிந்தளவு அதிக கூட்டமாக கோயில்களுக்குச் செல்வதனைத் தவிர்த்துமேலும் படிக்க...
திங்கட்கிழமை அரச விடுமுறை அறிவிப்பு!
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக எதிர்வரும் திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இந்தத் தீர்மானம் இன்று (சனிக்கிழமை) எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துவரும் நிலையில் முன்னெச்சரிக்கைமேலும் படிக்க...
நள்ளிரவு முதல் உணவகங்கள், அருந்தகங்கள்,திரையரங்குகளை மூடுமாறு பிரதமர் பணிப்பு
பிரான்சில் இன்று (சனிக்கிழமை) நள்ளிரவு முதல் அத்தியாவசியமற்ற மக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் உடனடியாக மூடப்படல் வேண்டும். உணவகங்கள் (restaurants), அருந்தகங்கள் (café -Bar), திரையரங்குகள் என அனைத்தும் உடனாடியாக இன்று நள்ளிரவுடன் மூடப்படல் வேண்டும் எனப், பிரதமர் எதுவார் பிலிப்மேலும் படிக்க...
இரண்டு வாரங்கள் பொதுக் கூட்டங்களுக்கு தடை விதிப்பு
இன்று (14) முதல் இரண்டு வாரங்களுக்கு பொதுக் கூட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதற்கானமேலும் படிக்க...
கிரேக்க நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக கேத்ரினா சாகெல்லரோபவ்லு பதவியேற்பு!
கிரேக்க நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கேத்ரினா சாகெல்லரோபவ்லு பதவியேற்றுள்ளார். கிரேக்கத்திலும் கோவிட்-19 வைரஸ் தொற்று பரவியுள்ளதால் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற பதவியேற்பு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே பங்கேற்றனர். எனினும்மேலும் படிக்க...
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலிருந்து இணை இயக்குநர் பில்கேட்ஸ் விலகல்!
உலகின் மிகப்பெரிய மென்பொருள், தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலிருந்து இணை இயக்குநர் பில்கேட்ஸ் விலகியுள்ளார். இதனை மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்யா நாதௌ;ளா அறிக்கையொன்றின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், அந்த அறிக்கையில் பில்கேட்ஸ் சத்யாமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான எழுவர் குணமடைந்தனர்!
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உத்தரப்பிரதேச மாநிலத்தில் 5 பேரும், டெல்லி, ராஜஸ்தானில் இருந்து தலா ஒருவரும் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஏற்கனவே கேரளாவில் மூவர் குறித்தமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் : தமிழகத்தில் பாடசாலைகளை மூடுவதற்கு வலியுறுத்து!
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து பாடசாலைகள், வணிக வளாகங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசிடம் பா.ம.க நிறுவனர் இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இன்றுமேலும் படிக்க...
யாழ் வைத்தியசாலையில் கொரோனா அறிகுறியுடன் இருவர் அனுமதி
கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி காரணமாக இராணுவச் சிப்பாய் ஒருவர் உட்பட இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றிரவு (13) அனுமதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் இராணுவ முகாமில் பணியாற்றும் சிப்பாய் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்மேலும் படிக்க...
பிரதமர் வௌியிட்டுள்ள விசேட அறிக்கை
கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கு அரசாங்கத்துக்கு உரிய வேலைத்திட்டம் இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ள பிரதமர் இந்த வைரஸ் தொடர்பில் கூடுதலான கவனத்துடன் அரசாங்கம் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் பொது மக்கள் தேவையற்றமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் பல தீர்மானங்கள்
ஐரோப்பியர்களுக்கு வீசா விநியோகம் இரண்டு வாரங்களுக்கு நிறுத்தப்படும் ஐரோப்பாவிலிருந்து வருகை தரும் இலங்கையர்கள் 14 நாட்கள் கண்காணிப்பில்.. பொதுமக்கள் போக்குவரத்து சேவை, கிருமி தொற்று ஒழிப்புக்கு நடவடிக்கை.… வைரஸ் தடுப்புக்கு சீனா மேற்கொண்ட வழிமுறைகள் தொடர்பாக ஆராய்வு… கொரோனா தடுப்பு செயலணிக்குமேலும் படிக்க...
கொரோனா வைரஸ அச்சுறுத்தல் – அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்!
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்திவருகிறது. உலகம் முழுவதும் 121 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5 ஆயிரத்து 43 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1மேலும் படிக்க...