Main Menu

கொரோனா வைரஸ் : இந்தியாவில் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 69 ஆயிரத்து 671 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.  இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 61 இலட்சத்து 43 ஆயிரத்தை கடந்துள்ளது.

அத்துடன் புதிதாக 777 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 96 ஆயிரத்து 351  ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 50 இலட்சத்து 98  ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 9 இலட்சத்து 48  ஆயிரம் பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...