Main Menu

பாஜகவுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்து விட்டால், ஜனநாயகமே இருக்காதோ என்று கவலைப் படுகிறார்கள்” – கமல்ஹாசன் பிரச்சாரம்

“ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான், நான் தம்பி திருமாவளவனோடு தோள் உரசி களம் கண்டிருக்கிறோம். இந்த முறை பாஜகவுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்துவிட்டால்,ஜனநாயகமே இருக்காதோ என்று அறிஞர்கள் கவலைப்படுகிறார்கள்.. அவர்கள் அறிஞர்கள் கவலை மட்டும் படுவார்கள். நாங்கள் வீரர்கள் களம் கண்டே ஆக வேண்டும்” என்று சிதம்பரத்தில் போட்டியிடும் திருமாவளவனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட மநீம தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் புதன்கிழமை சிதம்பரம் மேலரத வீதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான், நான் தம்பி திருமாவளவனோடு தோள் உரசி களம் கண்டிருக்கிறோம்.

இந்த முறை பாஜகவுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்துவிட்டால், ஜனநாயகமே இருக்காதோ என்று அறிஞர்கள் கவலைப்படுகிறார்கள். அவர்கள் அறிஞர்கள் கவலை மட்டும் படுவார்கள். நாங்கள் வீரர்கள்… களம் கண்டே ஆக வேண்டும். என் கட்சிக்காரர்கள் என்ன அண்ணே, இந்த முறை தியாகம் செய்துவிட்டீர்களே என்று கூறுகின்றனர். இது தியாகம் அல்ல வியூகம். திருமாவளவனுக்கும் அதே பிரச்சினை வந்தது. எத்தனை ஆண்டுகளாகத்தான் இரண்டு இடங்கள், மூன்று இடங்கள் கேட்டுப் பார்த்தார்கள். ஆனால், அது அல்ல இப்போதைய தேவை.என்று கமல்ஹாசன் பேசினார்.

பகிரவும்...