Main Menu

கொரோனா தடுப்பூசியை அச்சமின்றி விரைந்து பெற்றுக் கொள்ளுங்கள்- மகேசன் உமாகாந் மக்களிடம் கோரிக்கை

கொரோனா தடுப்பூசி எங்களுக்கு கிடைத்துள்ள வரபிரசாதமாகும். ஆகவே மக்கள் அச்சமின்றி விரைந்து தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுங்கள் என கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியரும் மட்டு.போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணருமான மகேசன் உமாகாந் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்வதன் ஊடாக  உங்களை மட்டுமின்றி  உங்கள் குடும்பம்,  சமூகம், நாடு ஆகியவற்றை பாதுகாக்கின்றீர்கள்.

அதாவது நாட்டை பாதுகாப்பதன் ஊடாகவே, இந்த உலகத்தில் இருக்கும் இந்த கொரோனா வைரஸை முழுமையாக தடுக்கமுடியும்.

எனவே தடுப்பூசியை அச்சமின்றி மக்கள் அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...