Main Menu

கொரோனாவுக்கு எதிரான சிகிச்சையில் 100 வீத வெற்றி! : சீன வைத்தியர்கள் தெரிவிப்பு

ஒட்டுமொத்த உலகத்தையே உலுக்கிவரும் கொரோனா தொற்றின் கோரத்தாண்டவத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக வைத்தியர்கள், நிபுணர்கள், விஞ்ஞானிகள் என பல தரப்பினரும் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா சீனாவின் வுஹான் நகரிலுள்ள ஆய்வுகூடமொன்றில் சீன வைத்தியர்கள் அடங்கி குழுவொன்றினால் இக்கொடிய நோய்க்கெதிராக கண்டுபிடிக்கப்பட்ட  “ஸ்டெம் செல் தெரப்பி சிகிச்சை” முறையில் தாம் வெற்றிகண்டுள்ளதாக அந்த வைத்திய குழு தெரிவித்துள்ளது. 

மேலும், இச்சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தால், ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடியும் என பிரதான வைத்தியரொருவர் தெரிவித்துள்ளார். 

மேலும், ஸ்டெம் செல் தெரப்பி சிகிச்சை நிபுணரான வைத்தியர் டோங்செங் வு, கொரோனா வைரஸ் நிமோனியாவுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒன்பது நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்துள்ளதாக தெரிய வருகிறது.

இந்நோயாயிகள் சீனாவில், வைத்திய பரிசோதனைக்கு வருவற்கு முன்னர், அவர்கள் பெரும்பாலும் வயதானவர்களாகவும், கடுமையான சுவாச பிரச்சினைகளால் சிரமப்பட்டதாகவும் தெரியவருகிறது. 

இந்நிலையில், நோயாளிகள் ஒன்பது பேருக்கு நேரடியாக , இவ் ஸ்டெம் செல் தெரப்பி சிகிச்சை (யு.சி-எம்.எஸ்.சி) மூலம் நரம்புகளில் ஊசி மூலம் மருந்துகள் செலுத்தப்பட்டதாகவும், அவர் தெரிவித்தார். 

மேலும், சிகிச்சையை பெற்ற சில நாட்களில் அவர்கள் அனைவரும் முழுமையான குணமடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இச்சிகிச்சை தொடர்பாக வைத்தியர் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் பின்வருமாறு தெரிவித்தார். 

‘இந்த சிகிச்சையானது ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றும், எனவே இயற்கையாகவே கண்டு பிடிக்கப்பட்ட இம்முறை மூலம் நோயாளிகள் குணமடைந்ததையிட்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். மேலும் இது ஒரு சிறப்பான சிகிச்சையாகும், ஆனால் இது ஆரம்பம் தான். இது தொடர்பாக இன்னும் ஆழமாக சென்று ஆராய்ச்சிகள் நடத்த வேண்டி இருக்கிறது என்றார்.  

மேலும்,  கொரோனா வைரஸ் நிமோனியாவுக்கு சிகிச்சையளிக்க ஸ்டெம் செல் தெரப்பி சிகிச்சை பாதுகாப்பானதா மற்றும் செயல்திறன் மிக்கதா என்பதை மேலும்  உறுதிப்படுத்த மருத்துவ பரிசோதனைகளை நாங்கள் செய்து முடிக்க வேண்டியது அவசியமுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...