Main Menu

வெளி நாட்டவர்களிற்கு தடை விதித்தது அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவிற்குள் வெளிநாட்டவர்களும் அவுஸ்திரேலிய பிரஜைகள்  அல்லாதவர்களும் நுழைவதற்கு தடை விதித்துள்ளதாக பிரதமர் ஸ்கொட்மொறிசன் அறிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை முதல் இந்த தடை நடைமுறைக்கு வரவுள்ளது.

அவுஸ்திரேலியாவில் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 80 வீதமானவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுடன் தொடர்புகொண்டவர்களாவோ அல்லது வெளிநாட்டவர்களுடன் நேரடி தொடர்பினை வைத்திருந்தவர்களோவோ காணப்படுகின்றனர் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக பெருமளவு பாதிப்புகள் இறக்குமதி செய்யப்பட்டனவாக காணப்படுகின்றன என பிரதமர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அரசாங்கம் இதனை கட்டுப்படுத்துவதற்காக எடுத்துள்ள நடவடிக்கைகள் பலன் அளித்துள்ளன,இந்த நடவடிக்கைகளை மேலும் விரிவாக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நெருக்கடியான தருணத்தில் அவுஸ்திரேலியர்கள் நடந்துகொண்ட விதம் குறித்த மிகச்சிறந்த செய்திகள் வெளியாகியுள்ளன.

அதேவேளை சில அவுஸ்திரேலியர்கள் தங்கள் நடவடிக்கைகள் மூலம் நல்லபெயரை ஏற்படுத்திக்கொள்கின்றனர் இல்லைஎன்பது வெளிப்படையான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் பதட்டத்தில் உள்ளது தெரியும் அடுத்த ஆறு மாதங்களிற்கு நாங்கள் இணைந்து பணியாற்றவேண்டும் இதன் காரணமாக நாங்கள் எங்கள் நடத்தையை கட்டுப்படுத்தி மாற்றங்கள் அவசியம் என்பதை புரிந்துகொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...