Main Menu

கொரிய தீபகற்பத்தின் நிலையான அமைதியை வலியுறுத்திய ஐ.நா. நினைவுக் கல்லறை

கொரிய தீப­கற்­பத்தில் காணப்­ப­டு­கின்ற போர் மேகங்கள் மற்­று­மொரு பாரிய உலக அழிவை நோக்­கி­யதா என்ற அச்சம் அமை­தியை விரும்பும் நாடுகள் மத்­தியில் காணப்­ப­டு­கின்­றது. அந்த பகு­தியில் நிலை­யான அமைதி உரு­வாக வேண்டும் என்­பதே கொரிய மக்­களின் பிரார்த்­த­னை­யாக காணப்­ப­டு­கின்­றது.

எரி­கின்ற தீயில் எண்ணெய் ஊற்றும் வகையில் சுய­நல நாடுகள் மீண்டும் கொரிய மண்ணை பயன்­ப­டுத்­தினால் அங்கு வாழ் மக்கள் மாத்­திரம் அல்ல உலகில் ஏனைய நாடு­களில் வாழும் மக்­க­ளுக்கும் அதன் தாக்கம் காணப்­படும். எவ்­வா­றா­யினும் போர் குறித்த அனு­பவம் இலங்­கையில் வாழும் எமக்கும் உள்­ளது. மூன்று தசாப்த­கால உள்நாட்டு போரில் பல இலட்சம் உயிர்­களை பலி­கொ­டுத்தும் இன்னும் பல்­லா­யிரம் உற­வு­களை தொலைத்தும் விட்­டுள்ளோம். ஒரு நாட்டில் வாழும் இரு இனங்கள் இலங்­கையில் போரிட்டுக் கொண்­டன. ஆனால் கொரி­யாவில் ஒரே இனம் வடக்கு– தெற்கு என பிரிந்து போரிட்­டது.

உலக வர­லாற்றில் கொரிய போரை மிகவும் வலி­மை­யா­னதும் உயி­ரி­ழப்­புக்கள் நிறைந்த போர் என்றும் கூறப்­ப­டு­கின்­றது. உலகில் பிள­வு­பட்ட ஒரே நாடு கொரி­யா­வா­கவே காணப்­ப­டு­கின்­றது. ஒரே இன மக்கள் கொரியா என்ற பரந்த பூமியில் வடக்கு -– தெற்கு என பிரிந்து போரி­டு­கின்­றனர். உதவி என்ற போர்­வையில் இரு பகு­தி­யையும் போருக்கு தயார்­ப­டுத்தும் வகையில் சில நாடு­களின் செயற்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன.

அதேபோன்று உலகில் சில நாடு­களில் தற்­போது காணப்­படும் போர், மக்கள் அழிவை கண்முன்னே காட்­டு­கின்­றது. உதா­ர­ண­மாக சிரியா மீதான தாக்­கு­தல்­களை கூறலாம். வன்­மை­யான நவீன ஆயு­தங்­களை கொண்டு மக்­களை அழித்­தாளும் நிலை­யி­னையே பல போர்கள் எடுத்­துக்­காட்­டு­கின்­றன.

இந்­நி­லையில் வட மற்றும் தென் கொரி­யா­வுக்கிடையில் மீண்டும் ஒரு போர் உரு­வா­குமா என்ற அச்ச நிலை காணப்­ப­டு­கின்­றது. இரு தரப்பு பேச்­சு­வார்த்­தைகள் பல ஆரோக்­கி­ய­மான நிலை­மையை தோற்­று­வித்­தாலும் குறிப்­பிட்ட சில நாடு­களின் செயற்­பா­டுகள் கொரிய தீப­கற்­பத்தில் போர் அச்­சத்தை ஏற்­ப­டுத்தும் வகையில் அமை­கின்­றது.

ஜன­நா­யக மக்­களின் கொரியக் குடி­ய­ரசு என்று பெயரைக் கொண்­டுள்ள வட கொரி­யாவின் தலை­ந­கரம் பியாங் கியாங் ஆகும். தென் கொரி­யா­வை­விட அதிக பரப்­ப­ளவு கொண்­டது என்­றாலும் வட கொரி­யாவில் மக்கள் தொகை மிகக்குறை­வாகும்.

ஏதேனும் ஒரு நாடு செயற்­கைக்­கோளை விண்­ெவளிக்கு அனுப்­பினால் அது குறித்து பல்­வேறு கருத்­துக்­களை ஏனைய உலக நாடுகள் முன் வைப்­பது பொது­வான விட­ய­மாகும். அது விமர்­ச­ன­மாகக்கூட அமை­யலாம். இவ்­வா­றா­ன­தொரு நிலையில் 2012 டிசம்பர் 12 அன்று வடகொரியா ஒரு புதிய செயற்­கைக்­கோளை விண்­ெவளிக்கு  அனுப்­பி­யது. பல நாடுகள் இதைக் கண்­டித்­தன. அமெ­ரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் இந்தச் செயற்­கைக்­கோளை போருக்­கான ஒத்­திகை என்­ற­வாறு பிர­சாரம் செய்­தன.

வடகொரியா ஏதேனும் பிற­நா­டு­க­ளினால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்டால் சீனா தனது இரா­ணு­வத்தை அனுப்பி பாது­ காக்கும் என்ற ஒப்­பந்தநிலை காணப்­பட்ட போதிலும் சீனாவும் வடகொரி­யாவின் செயற்­கைக்கோள் விவ­கா­ரத்தில் கண்­ட­னத்தை வெளியிட்­டது. ஐக்­கிய நாடுகள் சபை­யிலும் வடகொரி­யாவின் விவ­காரம் சூடு­பி­டிக்க தொடங்­கி­யது. அணு ஆயு­தங்கள் மற்றும் ஏவு­க­ணைகள் தொழில் நுட்­பத்தை பரி­சோ­தனை செய்­வ­தற்­கா­கவே  செயற்­கைக்கோள் தொழில்­நுட்­பத்தில் நாங்கள் ஆர்வம் காட்­டு­வ­தாக வடகொரியா தனது உறு­தி­யான நிலைப்­பாட்டை அறி­வித்­தது.

ஒரு கால­கட்­டத்தில் சீனாவின் முழு­மை­யான கட்­டுப்­பாட்டில் இருந்த கொரியா,  பின்னர் சுமார் 35 வரு­டங்கள் ஜப்­பானின் அதி­கார ஆக்­கி­ர­மிப்­புக்குள் அடங்கிக் கிடந்­தது. அப்­போது கொரியா ஒரே நாடா கத்தான் காணப்­பட்­டது. வடக்கு மற்றும் தெற்கு என்று பிரி­வினை இருக்க வில்லை.

இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஜப்பான் கொரி­யாவின் மீதான அதி­கா­ரத்தை நீக்கிக்கொண்­டது. ஆக்­கி­ர­மிப்­பி­லி­ருந்து விடு­பட்ட கொரியா சுதந்­திரக் காற்றை சுவாசிக்க முன்னர்  கொரி­யா வின் வடபகு­தி­யூ­டாக ரஷ்யா உள்­நு­ழைந்­தது. இதனால் அதி­ருப்­தி­கொண்ட அமெ­ரிக்கா தனது இரா­ணு­வத்தை கொரி­யாவின் தென்பகு­திக்கு அனுப்­பி­யது. இந்த இரண்டு தரப்­புமே கொரி­யாவின் இரு முனை­­யிலும் முன்­னெ­டுத்த அத்­து­மீ­றல்கள் அந்த நாட்டின் தலை­வி­தியை மாற்­றி­யது.

அமெ­ரிக்கா மற்றும் ரஷ்யா  இந்த இரு துரு­வங்­களின் கையில் சிக்­கிய கொரியா பிள­வு­பட்டு துண்­டா­டப்­பட்­டது. தான் ஆக்கி­ர­மித்துக்கொண்ட வடக்குப் பகு­தியை கம்­யூனிஸப் பாதையில்  ரஷ்யா அழைத்து சென்­றது.  அமெ­ரிக்­காவோ தென்கொரி­யாவை ஜன­நா­யகப் பாதையில் இட்டுச்சென்­றது.

அமெ­ரிக்க ஆத­ரவில் செயற்­பட்ட கொரி­யாவின் தென்பகுதி மக்கள், கம்­யூனிஸ ஆட்­சிக்கு எதி­ரான கொள்­கையில் இருந்­தனர். வடக்கு மற்றும் தெற்கு என எப்­போது பார்த்­தாலும் போர் மேகங்கள் எல்லைப் பகு­தி­களில் நிலை­கொண்­டி­ருக்கும். ஏனெனில் இரு தரப்பில் உள்ள படை­களும் அவ்­வப்­போது எல்லை மீறி தாக்­கு­தல்­களை நடத்­தி­யமை பிள­வு­பட்ட பின்­னரும் நிலை­யான அமை­திக்கு அச்­சு­றுத்­த­லா­கவே காணப்­பட்­டது.

இவ்­வா­றா­ன­தொரு நிலை­யி­லேயே கொரி­யாவின் வடக்குப் பகு­தியில் நிலை கொண்­டி­ருந்த இரா­ணுவம் தென் பகு­தியில் நுழைந்­தது. இதுவே கொரிய மக்­ களை மிகவும் கொடு­மை­யாக அழித்­தொ­ழித்த போரா­கவும் பரி­ணாமம் பெற்­றது.

கொரியப் போர் உலகின் மிக மோச­மான போர்­களில் ஒன்று எனக்­கூ­றப்­ப­டு­கின்­றது. ஆனால் ஒரே நாட்டில் இரண்­டாக பிள­வு­பட்ட மக்­க­ளுக்கு இடை­யி­லான உள்­நாட்டு விவ­காரம் என்றே இந்த போர் பிற்­கா­லத்தில் கூறப்­பட்­டது.  கொரி­யாவை வடக்கு மற்றும் தெற்கு என பிரித்து அதனை போர் பயிற்சி கள­மாக அமெ­ரிக்க மற்றும் ரஷ்யா அன்று சுய­ந­ல­மாக பயன்­ப­டுத்­திக்­கொண்­டுள்­ளன.

வடக்கு மற்றும் தெற்கு மோதிய கொரியப் போரில் அமை­தி­யை நிலை நாட்ட  முதன்­மு­றை­யாக ஐக்­கிய நாடுகள் சபை இரா­ணு­வத்தை அனுப்­பி­யது. பேர­ ழிவை ஏற்­ப­டுத்­திய  கொரிய போரில் இதுவொரு திருப்பு முனை­யாகும்.  உலக அமை­திக்கு களங்கம் ஏற்­ப­டுத்­தாது அமை­தி­யாக இருங்கள் என்ற தக­வலை ஐக்­கிய நாடுகள் சபை வட கொரி­யா­விற்கு அனுப்­பி­யது. ஆனால் ஐ.நா.வின் செய்­தியை உதா­சீனம் செய்யும் வகையில் வட கொரிய  தென்பகு­தியை நோக்கி தாக்­கு­தல்­களை தொடர்ந்­தது.

உறுப்பு நாடு­களின் இரா­ணுவ ஒத்­து­ழைப்­பு­க்களை பெற்றுக்கொள்­வ­தற்­காக ஐக்­கிய நாடுகள் சபை அவ­சர கடி­தத்தை அனுப்­பி­யது. இதற்கு பதி­ல­ளிக்கும் வகையில் 16 நாடுகள் தங்கள் இரா­ணு­வத்தை அனுப்­பி­யது. இன்னும் சில நாடுகள் போர் தள­பா­டங்­களை வழங்­கி­யது. 80 வீத­மான அமெ­ரிக்க படை வீரர்­களின் பங்­க­ளிப்­புடன் கொரிய போர் பெரும் மனித அழிவை நோக்கி நகர்த்தப்­பட்­டது. முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போரில் பங்­கு­பற்றி அனு­பவம் வாய்ந்த வோல்டன் வாக்கர் என்ற அமெ­ரிக்க படை தள­பதி ஐ.நா. இரா­ணு­வத்­திற்கு தலை­மை­ தாங்­கினார்.

தென்பகு­தியில் இருந்து கொரி­யாவின் வடக்கு பகு­தியை நோக்கி  ஐ.நா. இரா­ணுவம் போருக்கு தயா­ரானபோது சீனா தனது இரா­ணு­வத்தை வடகொரி­யா­வுக்கு ஆத­ர­வாகக் களம் இறக்­கி­யது. மறு­புறம் ரஷ்யா என தற்­போது அழைக்­கப்­படும் அன்­றைய சோவியத் யூனியன் பெரும் தொகை­யான போர்க் கரு­வி­களை வட கொரி­யா­வுக்குள் நகர்த்­தி­யது.

1949 ஆம் ஆண்டு செப்­டெம்­பரில் ரஷ்யா தனது முத­லா­வது அணு­குண்டை வெற்­றி­க­ர­மாக சோத­னை­யிட்­டி­ருந்­தது. போரில் தனது பலத்தை மிகவும்  நிரூ­பிக்க ஆர்­வத்­துடன் ரஷ்யா செயற்­பட்­டது. தனது ஆர்­வத்தை வெளிப்­ப­டுத்தும் வகையில் 1949 மற்றும் 1950 ஆம் ஆண்­டு­களில் வடகொரி­யாவில் போர் தள­பா­டங்­களை ரஷ்யா குவித்­தது. 1950 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 25 ஆம் திகதி கொரிய போர் தொடங்­கி­யது.

இந்த போரில் தென்கொரிய இரா­ணுவம் கடும் இழப்­புக்­களை சந்­தித்­தது. 21 நாடு­களின் பங்­க­ளிப்­புடன்  போரில் கள­மிறங்­கியும் ஐ.நா.  இரா­ணுவம் பெரும் இழப்­பு­களை சந்­தித்து பின்­வாங்­கி­யது. தென் கொரி­யாவின்  ஒரே இயற்கை துறை­மு­க­ மான பூசான் வரையில் பின்­வாங்­கி­யது. ரஷ்­யாவின் போர் ஆயு­தங்கள் தென் கொரிய நிலப்­ப­ரப்­பு­களில் கடு­மை­யான தாக்­கு­தல்­களை மேற்­கொள்­­கையில் சீன இரா­ணுவம் யாலு நதி ஊடாக வட கொரி­யாவின் உத­விக்கு வந்­தது. இதன் கார­ண­மாக ஐ.நா. இரா­ணுவம் மிகவும் மோச­மான நிலைமையில் பின்­வாங்­கி­யது.

பூசான் பகு­தியை இழந்து விடக்கூடாது என்­பதில் உறு­தி­யுடன் நின்று ஐ. நா. படை போரை எதிர்கொண்­டது. ஜூலை 29 ஆம் திகதி போரின் உச்சக்கட்­டத்தை சந்­தித்தபோது, வெற்றி அல்­லது வீர மரணம் என்று ஐ. நா. இரா­ணு­வத்­திற்கு தள­பதி வோல்டன் வாக்கர் அன்று வீரர்­க­ளுக்கு மத்­தியில் உரை­யாற்­றினார். நேரத்­துடன் போரிட்டுக்கொண்­டி­ருக்­கிறோம். இதற்கு மேல் சிறிதும் பின்­வாங்க முடி­யாது. பின்­வாங்க பின்­பு­ற­மாக எந்­தப்­ப­கு­தியும் இல்லை என்றே மனதில் கொள்­ளுவோம். புச­னையும் தாண்டி பின்வாங்­கினால் அது சரித்­தி­ரத்தின் மாபெரும் தற்­கொ­லை­களில் ஒன்­றா­கி­விடும். இறு­தி­வரை போரா­டுவோம். அணி­யாக போரி­டுவோம். இந்தப் பகு­தி­யி­லி­ருந்து ஓரடி கூட பின்­வாங்கக்கூடாது. விரைவில் வெல்வோம் என்று உணர்ச்­சி­பூர்­வ­மாக வீரர்­க­ளுக்கு மத்­தியில் உரை­யாற்­றினார்.

தென்கொரியா முழு­வதும் போர் மேகத்தின் கருமை சூழ்ந்­தது. தொடர்ந்தும் கடு­மை­யான போர். எதி­ர­ணிகள் மீதான இலக்­கு­களை குறி வைத்து ஐ. நா. இரா­ணுவம் முன்­னே­றி­யது. இரு தரப்­பிலும் இழப்­புகள் அதி­க­மா­கவே காணப்­பட்­டன.

இந்த போரில் பதி­னாறு இலட்சம் கம்­யூனிஸ்­டுகள் இறந்­தனர் அல்­லது காணா­ம­லாக்­கப்­பட்­டனர் என்று கூறப்­ப­டு­கின்­றது. அல்­லது தொலைந்­தனர். தென் கொரிய இரா­ணு­வத்தில் இறந்­த­வர்­களின் எண்­ணிக்கை பல இலட்­ச­மெ­னவும் கூறப்­ப­டு­கின்­றது. அதேபோன்று போரில் அப்­பாவித் தென்கொரிய மக்­க­ளிலும் பத்து இலட்சம் பேர் பலி­யா­ன­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது. ஆனால் உயி­ரி­ழந்­த­வர்­களின் எண்­ணிக்கை குறித்து இன்றும் மாறு­பட்ட கருத்­துக்கள் காணப்­ப­டு­கின்­றது.

கொரிய போர் மூன்று வரு­டங்கள் இடம்­பெற்று 1953 ஜூலை மாதம் 27 ஆம் திகதி ஒரு வழி­யாக நிறை­விற்கு வந்­தது. எந்தத் தரப்­பிற்­குமே முழு­மை­யான வெற்றி இல்லை. மறு­புறம் நிரந்­த­ர­மான சமா­தான ஒப்­பந்தம் எது­வு­மே­யில்­லாமல் ஒரு முடி­வுக்கு வந்த போர் கொரியப் போரெ­னவும் கரு­தப்­ப­டு­கின்­றது. அந்த கொரிய போர் சுவ­டு­களை தாங்­கி­ய­தாக  ஐ. நா. நினைவு கல்­லறை தென் கொரி­யாவின் பூசான் நகரில் ஸ்தாபிக்­கப்­பட்­டுள்­ளது. 2018 ஆம் உலக ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்­து­கொண்ட பன்­னாட்டு ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கும் இந்த கல்­ல­றைக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

மீண்டும் கொரிய மண்ணில் போர் இடம்பெறக்கூடாது. கொரியாவிற்கு மாத் திரம் அல்ல உலக அமைதிக்கும் ஆபத்து என்பதை பன்னாடுகளுக்கும் உணர்த்தும் வகையிலேயே தென் கொரியாவின் சியோல் நகரில் உலக ஊடகவியலாளர் மாநாடு இம்முறை நடாத்தப்பட்டது. அவ் வாறே கொரிய தீபகற்பத்தில் நிலையான அமைதி உருவாக பிரார்த்திப்போம்.

( லியோ நிரோஷ தர்ஷன் )

பகிரவும்...