Main Menu

காத்தார் சின்னக்குளம் வாணி முன்பள்ளி விளையாட்டு நிகழ்வு (படங்கள்)

வவுனியா மாவட்டம் காத்தார் சின்னக்குளம் வாணி முன்பள்ளியின் இல்ல மெய்வன்மை போட்டி நேற்று நடைபெற்றுள்ளது. இந் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் வினோ நோதராதலிங்கம் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாக பங்குகொண்டு விளையாட்டு நிகழ்வினைச் சிறப்பித்தனர்.
இதன் போது பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலி நிர்வாகத்தின் ஏற்பாட்டில் பிரான்ஸ் வாழ் புலம் பெயர் மக்களின் நிதி உதவியில் வாணி முன்பள்ளியில் கல்வி பயிலும் சிறார்கள் 23 பேருக்கு புத்தகப் பைகளும் கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

நிகழ்வின் போது கருத்துத் தெரிவித்த சிறார்களின் பெற்றோர் ரி.ஆர்.ரி வானொலியின் நிர்வாகத்தினருக்கும் நேயர்களுக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவிப்பதாக குறிப்பிட்டனர்.

61429784834258239079293005969434710700840863672639771959 (1)

 

பகிரவும்...