Main Menu

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு ரஷ்யாவும் உக்ரைனும் சண்டை நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும்: போப் பிரான்சிஸ்!

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு ரஷ்யாவும் உக்ரைனும் சண்டை நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வத்திகானிலுள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கு ஏதுவாக ஈஸ்டர் பண்டிகையையொட்டி உக்ரைனில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மக்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு நாடுகளின் தலைவர்கள் சில தியாகங்களைச் செய்ய வேண்டும்’ என கூறினார்.

பகிரவும்...