Main Menu

நாட்டு மக்கள் அனைவரும் எங்களுடன் கை கோருங்கள் – ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்

நீங்கள் என் மீது கொண்டுள்ள நம்பிக்கையே என்னை அர்ப்பணிப்புடன் இயங்க வைக்கிறது என நேற்று மாலை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற முதலாம் சுற்று வாக்கெடுப்பில் அபார வெற்றி பெற்று, இரண்டாம் சுற்று போட்டிக்கு தகுதி பெற்ற மக்ரோன், உடனடியாக தனது ஆதரவாளர்களைச் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது மக்ரோன் ஒன்றரை மணிநேரம் உரையாற்றினார். அவர் தெரிவிக்கையில்,

“முதலில் அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். சக போட்டியாளர்களுக்கும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் இது பெரும் ஏமாற்றம் என்பதை நான் அறிவேன். குறிப்பாக Anne Hidalgo, Yannick Jadot, Valérie Pécresse மற்றும் Fabien Roussel ஆகியோருக்கும் எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்!” என தெரிவித்தார்.

மேலும், “நீங்கள் என்மீது வைத்த நம்பிக்கை என்னை மேலும் வலுப்படுத்துகிறது. அர்ப்பணிப்புடன் செயற்பட வைக்கிறது. நான் ஒன்றை உறுதியாகச் சொல்வேன்.. முன்னர் இருந்தது போல் எதிர்காலத்தில் நிச்சயம் இருக்காது. புதிதாகவும், மேம்படுத்தப்பட்ட செயற்பாடுகளை செய்யவும் நான் உறுதியளிக்கிறேன். நாட்டு மக்கள் அனைவரும் எங்களுடன் கை கோருங்கள். சிலர் தீவிர வலது சிந்தனைகளுக்கு ஆதரவாக இருப்பார்கள். ஆனால் அதில் பலனேதும் இல்லை!” எனவும் மக்ரோன் தெரிவித்தார்.

நேற்றைய முதலாம் சுற்று வாக்கெடுப்பில் இம்மானுவல் மக்ரோன் 28.2% வீத வாக்குகளையும், மரீன் லூ பென் 22.9% வீத வாக்குகளையும் பெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.  

பகிரவும்...