Main Menu

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 75இலட்சத்தை நெருங்குகிறது

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 75இலட்சத்தை நெருங்கியுள்ளது.

இந்தியாவில் நேற்று (சனிக்கிழமை) மாத்திரம்  61,871பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த வைரஸ் தொற்றினால் ஆயிரத்து 33பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் பாதிப்பு எண்ணிக்கை 74இலட்சத்து 94ஆயிரத்து 552ஆகவும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 14ஆயிரத்து 31ஆகவும் அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து  குணமடைந்தோர் எண்ணிக்கை 65இலட்சத்து 97ஆயிரத்து 210ஆக உயர்ந்துள்ள நிலையில், மேலும் 7இலட்சத்து 83ஆயிரத்து 311பேர்  வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...