Main Menu

விருதுநகரில் ராதிகா சரத்குமார் போட்டி

மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் 4-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், விருதுநகர் தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தல் தேதி கடந்த மார்ச் 16-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகின்றன. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில், முதற்கட்டமாக பாஜக 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நேற்று (மார்ச் 21) அறிவித்தது. இதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையிலும், தென்சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன்,  மத்திய சென்னையில் வினோத் பி செல்வம்,  கன்னியாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணன், திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன், நீலகிரியில் எல்.முருகன், வேலூரில் ஏ.சி.சண்முகம், பெரம்பலூரில் பாரிவேந்தர், கிருஷ்ணகிரியில் நரசிம்மன் உள்ளிட்டோர் போட்டியிடுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...