Main Menu

அல்பேனியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – நூற்றுக் கணக்கானோர் பாதிப்பு 16 பேர் உயிரிழப்பு

அல்பேனியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.

அல்பேனியா தலைநகர் திரானாவிலிருந்து சுமார் 18 மைல்கள் தூரம் உள்ள ஷிஜக் நகரில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆகப் பதிவாகியது. இந்த நிலநடுக்கம் அல்பேனியாவில் கணிசமான அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நிலநடுக்கம் காரணமாக நூற்றுக்கணக்கானோர் பேர் காயமடைந்ததாகவும் நிலையில் 16 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் காரணமாக பல இடங்களில் வீடுகள் மற்றும் வீதிகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், இதேவேளை மீட்புப் பணிகள் நடந்து வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...