Main Menu

ஈழ மண்ணில் அதிசயம் நிகழ வேண்டும்: பிரபாகரன் பிறந்தநாளில் ராமதாஸ்!

ஈழ மண்ணில் அதிசயம் நிகழ வேண்டும் என்று விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் டுவீட் செய்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “பின்வாங்கா போர்த்திறன், அறம் வழுவா ஆட்சி திறன், மதுவை மக்களிடம் நெருங்க விடா மாவீரன் பிரபாகரனுக்கு 65ஆவது பிறந்த நாள் வாழ்த்துகள்.

படைகளால் மட்டுமின்றி, பழக்க வழக்கங்களாலும் சீரழிந்து கிடக்கும் தமிழீழத்தை சீரமைத்து, சிறப்பான ஆட்சி வழங்குவதே புலிகளின் தலைவனுக்கு செலுத்தும் மரியாதையாகும்.

மாவீரர்கள் மண்ணில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மொழி, கலாச்சார, பண்பாட்டு சீரழிவுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை, தாங்கிக் கொள்ள முடியாதவை.

இந்த சீரழிவுகளை சரி செய்து தமிழர்களின் உன்னத, அறம் சார்ந்த வாழ்க்கை முறையை மீட்டெடுக்கவாவது அந்த மண்ணில் அதிசயம் நிகழ வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

பகிரவும்...