Main Menu

அரசியல் மற்றும் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வெளிநாடுகளுக்கு எந்த உரிமையும் இல்லை

இலங்கையின் அரசியல் மற்றும் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வெளிநாடுகளுக்கு எந்த உரிமையும் இல்லை என எதர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தங்காலை – கால்ரன் இல்லத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தலின்போது தன்னைத் தோற்கடிப்பதற்கு வெளிநாடுகள் செயற்பட்டமை குறித்து தாங்கள் அறிவீர்கள் என மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இலங்கையின் அரசியல் மற்றும் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என வெளிநாடுகளின் கோருவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பகிரவும்...