Main Menu

ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆரப்பாட்டக் காரர்கள் கைது

ரஷ்யா மொஸ்கோவில்  மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆரப்பாட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
எதிர்கட்சி வேட்பாளர்களை உள்ளுர் தேர்தல்களில் இருந்து நீக்குவதை எதிர்த்து குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அங்கு இடம்பெறவுள்ள தேர்தலில் சுமார் 30க்கும் மேற்பட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.

அவர்களது தேர்தல் விண்ணப்பங்களில் தெளிவின்மை காரணமாகவே தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அரசியல் காரணங்களுக்காகவே தாம் தேர்தல்களில் புறக்கணிக்கப்படுவதாக அந்த நாட்டு எதிர்கட்சி கூறியுள்ளது.

பகிரவும்...