Main Menu

துயர் பகிர்வோம் – அமரர்.திருமதி. பவளம்மா நடராஜா (21/02/2021)

தாயகத்தில் குப்பிளானை பிறப்பிடமாகவும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி.பவளம்மா நடராஜா அவர்கள் 20.02.2021 அன்று சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம் சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும் ரஞ்சனி (பிரான்ஸ்), வரதராஜன் (சுவிஸ்), ரஞ்சனா (இலங்கை) ஆகியோரின் தாயாரும், சூரியகுமார் (பிரான்ஸ்), நளாயினி (சுவிஸ்), பரஞ்சோதி மூர்த்தி (இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலம் சென்ற வைத்திலிங்கம், அன்னமுத்து, தையல்முத்து, இரத்தினசிங்கம் (யாழ்.குப்பிளான் விக்கினேஸ்வரா ம.வி முன்னாள் அதிபர், தற்போதைய வசிப்பிடம் ஜேர்மனி) சிவலிங்கம் (முன்னாள் சுன்னாகம் கூட்டுறவு சங்கங்களில் பொது முகாமையாளர், இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலம் சென்ற சரஸ்வதி, நாகையா, வீரசிங்கம், காலம் சென்ற புவனேஸ்வரி (யாழ்.குப்பிளான் விக்கினேஸ்வரா ம.வி முன்னாள் ஆசிரியை) , கணேசம்மா இலங்கை ஆகியோரின் மைத்துனியும்,

துவாரகா, கஜேந்திரன், துஸ்யந்தியா, கஜனன், சுயி ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

இறுதிச்சடங்குகள் பற்றிய விபரம் – March 02 03 2021 செவ்வாய்க்கிழமை 07h00 à 10h00

Zac du Paradis, rue des Terres rouges, 18500 MEHUN SUR YEVRE என்ற முகவரியில் நடைபெற்று

Crématorium de Bourges, 1 rue Martin Siemens, 18000 bourges எனும் முகவரியில் 11h00 மணிக்கு தகனம் செய்யப்படும்

தகவல்
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு
வரதராஜன் 0041791547753 (சுவிஸ்)
ரஞ்சனா 0094771364062 (இலங்கை)
பரஞ்சோதி மூர்த்தி 0094741455416 (குப்பிளான், இலங்கை)
ரஞ்சினி 0033951855130 (பிரான்ஸ்)

இத் துயர் பகிர்வில் TRTதமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதோடு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

பகிரவும்...