உலகம்
இரண்டு முககவசம் அணிவது அவசியமா?- மருத்துவ நிபுணர்கள் விளக்கம்
மாஸ்க் அணிவது நமது உடலில் இருந்து வைரஸ் வெளியே பரவாமல் இருக்கவும், அதேபோல் வெளியில் இருந்து வைரஸ் நம் மூக்கு வாய் பகுதியில் நுழையாமல் இருக்கவும் தான். கொரோனாவிடம் இருந்து தப்பிக்க மாஸ்க் அணியாமல் வழியில்லை என்றாகிவிட்டது. அதே நேரம் மாஸ்க்மேலும் படிக்க...
ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம்- மியான்மரில் மேலும் 82 பேர் சுட்டுக்கொலை
மியான்மரில் ராணுவத்தால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 614 ஆக உயர்ந்துள்ளதாக மியான்மர் அரசியல் கைதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு படையினர் குவிப்பு (கோப்பு படம்)யாங்கூன்:மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி 1-ந் தேதி ராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.மேலும் படிக்க...
60 நாடுகளில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு
இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் தடுப்பு மருந்து ஏற்றுமதியை நிறுத்த உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை அமெரிக்கா, ரஷியா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் உருவாக்கி பொது மக்களுக்கு செலுத்தி வருகின்றன. ஐரோப்பிய நாடுகள், தடுப்பு மருந்துகளைமேலும் படிக்க...
எத்தியோப்பியாவில் சிக்கியிருக்கும் ஆயிரக் கணக்கான புகலிட கோரிக்கையாளர்கள் ஆபத்தில் உள்ளனர்!
எத்தியோப்பியாவின் மேற்கு காம்பெல்லா பிராந்தியத்தில் தெற்கு சூடானில் இருந்து ஆயிரக்கணக்கான புகலிடம் கோருவோர் பல மாதங்களாக பயங்கரமான நிலையில் சிக்கித் தவிக்கின்றனர் என்று மருத்துவ தொண்டு எம்.எஸ்.எஃப் தெரிவித்துள்ளது. தெற்கு சூடானியர்களுக்கு உணவு உதவி உள்ளிட்ட முக்கியமான சேவைகளுக்கான அணுகல் இல்லைமேலும் படிக்க...
உலகின் பெரிய இந்து கோவிலான ‘அங்கோர்வாட்’ ஆலயம் மூடப்பட்டது
கம்போடியாவில் இதுவரை 3 ஆயிரத்து 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 113 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளதால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. தென்கிழக்கு ஆசியமேலும் படிக்க...
60 வயதிற்கு மேற் பட்டவர்களுக்கு மட்டுமே அஸ்ட்ராஸெனெகா கொவிட்-19 தடுப்பூசி: போர்த்துகல் திட்டம்!
60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அஸ்ட்ராஸெனெகா கொவிட்-19 தடுப்பூசியை போர்த்துகல் பரிந்துரைக்கும் என்று சுகாதார ஆணையம் டிஜிஎஸ் தெரிவித்துள்ளது. தடுப்பூசி பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஹென்ரிக் மெலோ, இந்த முடிவு தடுப்பூசி செலுத்தலின் சிறிய தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தும் என கூறினார். ஏற்கனவேமேலும் படிக்க...
எங்களை தாக்கினால் கடைசிவரை விட மாட்டோம் – சீனாவுக்கு தைவான் பகிரங்க எச்சரிக்கை
சீனா, தைவான் நாட்டை தனது சொந்த பிரதேசமாக அறிவித்து அமைதியான முறையில் அல்லது ராணுவ பலத்தால் வெல்வோம் என்று தெரிவித்துள்ளது. சீனா தனது அண்டை நாடுகளுடன் எல்லை பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறது. ஆங்காங் நாட்டை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அதேபோல்மேலும் படிக்க...
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் 29இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக 29இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் பெருந்தொற்றினால், 13கோடியே 36இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, மொத்தமாக வைரஸ் தொற்றிலிருந்து 10கோடியே 78இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்டமேலும் படிக்க...
எங்கள் நாட்டில் கொரோனா வைரசே இல்லை – உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா தகவல்
மோசமான சுகாதார கட்டமைப்பைக் கொண்ட வட கொரியாவில் வைரஸ் பாதிப்பு இல்லை என கூறப்படுவது நம்ப முடியாத ஒன்று என சர்வதேச நிபுணர்கள் கூறுகின்றனர். உலக நாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள கிழக்கு ஆசிய நாடான வட கொரியா, கொரோனா வைரஸ் பரவமேலும் படிக்க...
துபாயில் படைப்புத்திறன் மாவட்டம் – ஆட்சியாளர் அறிவிப்பு
துபாயில் புதிதாக ‘அல் கூஸ் படைப்புத்திறன் மாவட்டம்’ என்ற பெயரில் ஸ்மார்ட் நகரம் அறிமுகம் செய்யப்படுகிறது. மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம்துபாய்:துபாய் ஆட்சியாளர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-துபாயில்மேலும் படிக்க...
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க போவதில்லை – வடகொரியா அறிவிப்பு
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா பரவலால் இ்ந்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. கொரோனா அச்சம் காரணமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க போவதில்லை என வடகொரியா அறிவித்துள்ளது. ஜப்பான் தலைநகர்மேலும் படிக்க...
வங்காளதேசத்தில் சரக்கு கப்பல் மோதி, பயணிகள் கப்பல் ஆற்றில் கவிழ்ந்தது – 27 பேர் பலி
சுமார் 150 பயணிகளுடன் தலைநகர் டாக்காவில் இருந்து நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள முன்ஷிகாஞ்ச் மாவட்டத்துக்கு பயணிகள் கப்பல் ஒன்று புறப்பட்டு சென்றது. வங்காளதேசத்தில் சாலை போக்குவரத்துக்கு அடுத்தபடியாக நீர்வழி போக்குவரத்து மிகவும் பிரதானமாக உள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்குமேலும் படிக்க...
தாய்லாந்தில் நடந்த அழகி போட்டியில் மியான்மர் ராணுவத்துக்கு எதிராக குரல் கொடுத்த அழகி
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டு மக்கள் 2 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர். மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அதை வேளையில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்புமேலும் படிக்க...
கொசோவோவின் புதிய ஜனாதிபதியாக வஜோசா ஒஸ்மானி தெரிவானார்!
தெற்கு ஐரோப்பிய நாடான கொசோவோவில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான புதிய ஜனாதிபதியாக 38 வயதான வஜோசா ஒஸ்மானி (Vjosa Osmani) தெரிவு செய்யப்பட்டுள்ளார். போருக்குப் பிந்தைய காலத்தில் நாட்டின் ஏழாவது மற்றும் இரண்டாவது பெண் ஜனாதிபதியாக இவர் தெரிவாகியுள்ளார். இரண்டு நாட்கள்மேலும் படிக்க...
இந்தோனேசியாவில் வெள்ளம்- நிலச் சரிவுகளில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 100ஐக் கடந்தது
இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 101ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த அனர்த்தங்களில் சிக்கி பலர் காணாமல்போயுள்ள நிலையில், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம்மேலும் படிக்க...
ஆட்சி கவிழ்ப்பு குற்றச்சாட்டு: ஜோர்தானின் முன்னாள் பட்டத்து இளவரசர் வீட்டுக்காவல்!
ஜோர்தானின் மன்னரான இரண்டாம் அப்துல்லாவின் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், மன்னர் அப்துல்லாவின் ஒன்றுவிட்ட சகோதரரும் முன்னாள் பட்டத்து இளவரசருமான ஹம்ஸா பின் உசேன் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். தான் வீட்டுக்காவலில் சிறைவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஹம்ஸா பின் உசேன்,மேலும் படிக்க...
செவ்வாய் கிரகத்தில் பறக்க தயாராகும் நவீன ஹெலிகாப்டர்
நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய பெர்சவரன்ஸ் விண்கலம் கடந்த பிப்ரவரி மாதம் 18-ந் தேதி செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்தனவா என்பது குறித்து பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவின் நாசாமேலும் படிக்க...
பல்கேரியாவில் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வாக்களிப்பு!
பல்கேரியாவில் நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடைபெறுகின்ற நிலையில் புதிய நாடாளுமன்றத்திற்கு மக்கள் வாக்களித்து வருகின்றனர். உள்ளூர் நேரப்படி, இன்று காலை ஏழு மணிக்குத் தொடங்கியுள்ள வாக்குப்பதிவு, இரவு எட்டு மணிக்கு நிறைவடையவுள்ளது. பல மாதங்கள் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னர் மற்றும்மேலும் படிக்க...
இத்தாலியில் மூன்று நாட்கள் முழு முடக்கம்- ஈஸ்டர் நாள் நிகழ்வுகள் முடங்கின!
ஈஸ்டர் வார இறுதியில் இத்தாலி கடுமையான மூன்று நாட்கள் முடக்கத்தை அமுல்படுத்தியுள்ளது. இதேவேளை, தேவாலயங்களைத் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஈஸ்டர் தினத்தை வீட்டிலிருந்து கொண்டாடுமாறு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முழு முடக்கத்தினால் அனைத்து அத்தியாவசியப் பயணங்களும் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், ஈஸ்டர் தினத்தை மக்கள்மேலும் படிக்க...
வடகொரியாவை அணு ஆயுதம் இல்லாத நாடாக மாற்ற மூன்று நாடுகள் உறுதி!
வடகொரியாவை அணு ஆயுதம் இல்லாத நாடாக மாற்ற தொடர்ந்து ஒருங்கிணைந்து பணியாற்றுவோம் என அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் உறுதிபட தெரிவித்துள்ளன. அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களினால் அமெரிக்கா மற்றும் வடகொரியா ஆகிய இருநாடுகளும் தொடர்ந்து முரண்பட்டுவருகின்றன. இந்தநிலையில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- …
- 121
- மேலும் படிக்க