இலங்கை
13 அம்ச ஆவணத்தை முன்னிறுத்தி தமிழ்க் கட்சிகளுடன் பேசத் தயாரில்லை – கோத்தாபய ராஜபக்ச
அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் பேசுவதற்காக ஐந்து தமிழ்க் கட்சிகள் இணைந்து, 13 கோரிக்கைகள் அடங்கிய ஆவணம் ஒன்றை தயாரித்துள்ள நிலையில், பிரதான வேட்பாளர்கள் எவரும், பேச்சுக்களை நடத்துவதில் ஆர்வம் காட்டவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் மக்களின் அபிலாசைகள், பிரச்சினைகளைமேலும் படிக்க...
குழறுபடிகள் நடந்தால் வாக்களிப்பு ரத்து – தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரிக்கை
அஞ்சல் வாக்குச் சீட்டு புள்ளடியிடும் மையங்களில் ஏதாவது தலையீடுகளோ அல்லது அச்சுறுத்தும் முயற்சிகளோ இடம்பெற்றால், அந்த மையங்களில் இடம்பெற்ற வாக்களிப்பு ரத்து செய்யப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய எச்சரித்துள்ளார். ”அரச பணியாளர்கள் அஞ்சல் வாக்குச் சீட்டுக்களில் தமதுமேலும் படிக்க...
கூட்டமைப்பின் நிலைப்பாடு வியாழன்று வெளிவரும்
சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு, வரும் 24ஆம் நாள் வெளியிடப்படும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் என்பனமேலும் படிக்க...
சிறிலங்கா தேர்தலை கண்காணிக்க 60 பேரை அனுப்புகிறது ஐரோப்பிய ஒன்றியம்
சிறிலங்கா அதிபர் தேர்தலைக் கண்காணிக்க, ஐரோப்பிய ஒன்றியம், குறுகிய கால, மற்றும் நீண்டகால அடிப்படையில் 60 கண்காணிப்பாளர்களைப் பணியில் அமர்த்தவுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு அணி சிறிலங்காவின் ஒன்பது மாகாணங்களிலும், 30 நீண்டகால கண்காணிப்பாளர்களை பணியில் அமர்த்தவுள்ளது. தேர்தலுக்கு முந்தியமேலும் படிக்க...
கோத்தாபயவை ஜனாதிபதியாக்க அனைவரும் ஆதரிக்க வேண்டும் – முன்னாள் யாழ். கட்டளைத்தளபதி கத்துருசிங்க
நாட்டை கட்டியெழுப்பும் தலைவனாக முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய காணப்படுகின்றார். ஜனாதிபதியாக்க அனைவரும் அவரை ஆதரிக்க வேண்டும் என யாழ். மாவட்ட முன்னாள் கட்டளைத்தளபதி மகிந்த கத்துருசிங்க தெரிவித்தார். அதேவேளை, இலங்கை இராணுவம் எவரும் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை. உலகத்தில் உள்ள இராணுவங்களில்மேலும் படிக்க...
முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் மனித எச்சங்கள்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் மனித எலும்பு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இது தொடர்பில் தெரியவருகையில், சுதந்திரபுரம் கொலனி பகுதியில் தனியார் ஒருவரின் காணியில் ஒருபகுதியில் மண்எடுத்து மறுபகுதியில் கொட்டியுள்ளார். இதன்போது எடுக்கப்பட்ட மண்ணில் புதையுண்ட நிலையில் மனிதமேலும் படிக்க...
பலவீனப் படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு சார் விடயங்கள் அனைத்தும் புதுப்பிக்கப் பட வேண்டும் – கோத்தாபய
தேசிய பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டுமாயின் பலவீனப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு சார் விடயங்கள் அனைத்தும் ஆரம்பத்தில் இருந்து புதுப்பிக்கப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். நீர்கொழும்பில் நேற்றிரவு இரவு இடம் பெற்ற பொதுஜனமேலும் படிக்க...
13 அம்ச கோரிக்கையை கோட்டா மறுத்தாலும் பேச்சுவார்த்தைக்கு நாம் தயார் – கூட்டமைப்பு
தமிழ் அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ள 13 அம்ச கோரிக்கைகள் குறித்து விவாதிக்க ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மறுத்தாலும் அவரை சந்திக்க தாங்கள் தயாராகவே இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுடன்மேலும் படிக்க...
தேர்தலில் ஹிஸ்புல்லா களமிறங்கியிருப்பது தற்கொலைக்கு சமனானது- பைசல் காசிம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஹிஸ்புல்லா களமிறங்கியிருப்பது தற்கொலைக்கு சமனானதென சுகாதார சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார். கல்முனையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பைசல் காசிம் மேலும்மேலும் படிக்க...
பிரிகேடியர் பிரியங்கவின் விலக்குரிமையை பிரித்தானியா மதிக்க வேண்டும் – சிறிலங்கா
பிரித்தானியாவின் பொது ஒழுங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு, இராஜதந்திர விலக்குரிமை உள்ளது என்றும், அதனை பிரித்தானியா மதித்து நடக்க வேண்டும் என்றும் சிறிலங்கா கோரியுள்ளது. 2018 பெப்ரவரி 4ஆம் நாள் லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின்மேலும் படிக்க...
நாட்டை பிரித்து விட்டார்களோ என்ற சந்தேகம் – பத்தரமுல்ல சீலாரத்தன தேரர்
யாழ்ப்பாணம் விமான நிலையத்தை அமைத்துள்ளதன் மூலம் நாட்டை ஏற்கனவே பிரித்து விட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும், ஜனசெத பெரமுனவின் தலைவர் தலைவரான பத்தரமுல்ல சீலாரத்தன தேரர் தெரிவித்துள்ளார். கட்டுநாயக்கவில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றியமேலும் படிக்க...
சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து பரப்புரைகளை மேற்கொள்ளப் போவதில்லை – கோத்தாபய ராஜபக்ச
சிறிலங்கா பொதுஜன முன்னணியுடனும், அதன் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுடனும், புரிந்துணர்வு உடன்பாடுகளைச் செய்து கொண்டுள்ள போதும், அந்தக் கட்சியுடன் இணைந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி பரப்புரைகளை மேற்கொள்வதில்லை என்று முடிவு செய்துள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், கோத்தாபய ராஜபக்சவுக்கும் இடையில்மேலும் படிக்க...
நடக்கவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தல் மீது சில வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் அதிக ஆர்வம்
அடுத்த மாதம் நடக்கவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தல் மீது சில வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் முதல்முறையாக அதிக ஆர்வம் காட்டுகின்றன என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகளின் முகவர்கள் பலர் அதிபர் தேர்தல் தொடர்பானமேலும் படிக்க...
செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க தடுமாறிய கோத்தாபய ராஜபக்ச
ஊடகங்களிடம் பேசுவதற்கு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தயங்குகிறார் என்ற குற்றச்சாட்டு பல வாரங்களாக இருந்து வந்த நிலையில், அதனைச் சமாளிப்பதற்காக, கடந்த வாரம் ஷங்ரிலா விடுதியில் ஒரு செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மகிந்த ராஜபக்ச, ஜி.எல்.பீரிஸ்மேலும் படிக்க...
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவு நாள் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு
ஈழ தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவு நாள் நேற்று (19) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் சங்கத் தலைவர் வி.கிருஷ்ணகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மட்டு – மாநகர முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொன்.செல்வராஜா,மேலும் படிக்க...
சுதந்திரக் கட்சிக்கும் கோட்டபய ராஜபக்ஷவுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து
இலங்கை சுதந்திரக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்ஷவுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (19) கையெழுத்தானது. அது மேற்கு மாகாண அழகியல் ரிசார்ட்டில் இருந்தது. இலங்கை சுதந்திரக் கட்சி சார்பில் பொதுச் செயலாளர் தயசிறி ஜெயசேகர புரிந்துணர்வுமேலும் படிக்க...
கிழக்கு மாகாணத்தில் உள்ள பத்து சிறு கட்சிகள் கோட்டாவிற்கு ஆதரவு!
கிழக்கு மாகாணத்தில் உள்ள பத்து சிறு கட்சிகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஆதரவளிக்க தீர்மானித்துள்ளன. இன்று(சனிக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் இது குறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார். தமிழ் மக்கள்மேலும் படிக்க...
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இதுவரையில் 938 முறைப்பாடுகள் பதிவு!
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இதுவரையில் 938 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 900 முறைப்பாடுகளும், தேர்தல் தொடர்பான வன்முறைகள் குறித்து 8 முறைப்பாடுகளும்; பதிவாகியுள்ளதாக அவர்மேலும் படிக்க...
சென்னைக்கான விமான சேவை – மேலும் பல நிறுவனங்கள் முன்வரும்
யாழ்ப்பாணத்துக்கும் சென்னைக்கும் இடையில், விமான சேவைகளை நடத்துவதற்கு மேலும் பல நிறுவனங்கள் முன்வரும் என்று சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் எச்எம்சி.நிமலசிறி தெரிவித்துள்ளார். “யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், நொவம்பர் 1ஆம்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 374
- 375
- 376
- 377
- 378
- 379
- 380
- …
- 433
- மேலும் படிக்க
