Main Menu

அமைச்சில் இடம்பெற்ற கூட்டத்தில் ஞானசாரர்

கல்­முனை வடக்கு  பிர­தேச  செய­ல­கத்­தினை  தர­மு­யர்த்­து­வது தொடர்பில்    உள்­நாட்­ட­லு­வல்கள்  மாகாண சபை அமைச்சில்  நேற்று அமைச்சர் வஜிர அபே­வர்த்­தன தலை­மையில் இடம்­பெற்ற கூட்­டத்தில்  பொது­ப­ல­சே­னாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்­தே­ஞா­ன­சார தேரர்  பிர­வே­சித்­த­மை­யினால்  பெரும் பர­ப­ரப்பு  ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. 

நேற்­றுக்­காலை இந்­தக்­கூட்டம்  நடை­பெற்­றது.  இதில் அம்­பாறை மாவட்ட அர­சாங்க  அதிபர் மற்றும்  பிர­தேச செய­லா­ளர்கள்  அமைச்சின் செய­லா­ளர்கள் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.  இந்த கூட்­டத்தின் இடை­ந­டுவில்  உட்­பு­குந்த  கல­கொட அத்­தே­ஞா­ன­சார தேரர் கல்­முனை வடக்கு பிர­தேச செய­ல­கத்­தினை தர­மு­யர்த்­து­வதில் காண்­பிக்­கப்­படும்  கால­தா­மதம் தொடர்பில் கடும் அதி­ருப்தி   தெரி­வித்­துள்ளார். 

இந்த விட­யத்தில்  இழுத்­த­டிப்பு மேற்­கொள்­ளப்­ப­டு­கின்றது. அம்­பாறை மாவட்ட அர­சாங்க அதிபர் இந்த விட­யத்தில் உரிய நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை.  கிழக்கில்  பல்­வேறு கிரா­மங்­க­ளுக்கு அரா­பிய பெயர்கள் வைக்­கப்­பட்­டுள்­ளன.  இஸ்­லா­மாபாத் என்று ஒரு கிராமம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.  இத்­த­கைய செயற்­பா­டு­க­ளுக்கு  ஏன் அனு­ம­திக்­கின்­றீர்கள் என்றும்   ஞான­சார தேரர்   கண்­டனம் தெரி­வித்­துள்ளார்.  

ஞான­சார தேரரின் கருத்­துக்­களை அடுத்து   அமைச்சர் வஜிர அபேவர்த்தன  அம்பாறை மாவட்ட  செயலாளர் உட்பட அதிகாரிகளின்  செயற்பாடுகள் தொடர்பில்   அதிருப்தி தெரிவித்ததாகவும்   கூறப்படுகின்றது. 

பகிரவும்...