Main Menu

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விஷேட தெரிவுக்குழு இன்று மீண்டும் கூடுகிறது

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது. இன்று 7 ஆவது அமர்வாகும்.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்தத் தெரிவுக்குழு கூடவுள்ளது. நேற்றை தினமும் பாராளுமன்ற கட்டிட தொகுதியில் இவ் விஷேட தெரிவுக்குழு கூடியது.

இதன் போது, தெரிவுக்குழுவிடம் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டது. பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இந்த தெரிவுக்குழு இயங்கி வருகிறது

பகிரவும்...