Main Menu

கல்லால் அடித்துக்கொல்ல வேண்டுமென எந்தவொரு பௌத்தரும் எண்ணமாட்டார் – மங்கள

எமது உயரிய தத்துவங்களான சமாதானம்   மற்றும் அன்பு ஆகியவற்றை தலிபான் மயப்படுத்தும் (அடிப்படைவாதம்) முயற்சிகளுக்கு  எதிராக அனைத்து உண்மையான பௌத்தர்களும்  ஒன்றிணைய வேண்டும் என்று  நிதியமைச்சர் மங்கள சமரவீர அழைப்பு விடுத்துள்ளார்.

எந்தவொரு மனிதனையும்  கல்லால் அடித்து   கொல்லவேண்டுமென எந்தவொரு பௌத்தரும் எண்ணமாட்டார். அவர் ஒரு  கொள்ளையராக இருந்தாலும் கூட ஒரு பௌத்தர் அப்படி செய்ய மாட்டார் என்றும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

 நாட்டின்  தற்­போ­தைய நிலை  தொடர்பில் நேற்று டுவிட்டர் பதி­வொன்றைச் செய்­தி­ருந்த  மங்­கள சம­ர­வீர அதில் இதனைக் கூறி­யி­ருந்தார். 

முஸ்லிம் மக்­களின் வர்த்­தக நிலை­யங்­களைப் பகிஷ்­க­ரிக்க வேண்­டு­மென அஸ்­கி­ரிய பீடத்தின் மகா­நா­யக்கர் வரக்­கா­கொட ஞான­ரத்ன தேரர்  கருத்துத் தெரி­வித்து  மூன்று தினங்­களின் பின்னர்  நிதி அமைச்சர்   இவ்­வா­றான ஒரு ­க­ருத்தைப் பதிவு செய்­தி­ருக்­கின்றார். 

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கண்­டியில் நடை­பெற்ற நிகழ்­வொன்றில்  கலந்­து­கொண்ட  வரக்­கா­கொட ஞான­ரத்ன தேரர்  குறிப்­பி­டு­கையில்; 

முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான கடை­க­ளுக்குப் போக­தீர்கள், அவர்கள் வழங்கும் உண­வு­களை உட்­கொள்ளா­தீர்கள். முஸ்­லிம்கள் எம்­ மீது அன்பு கொண்­டி­ருக்­க­வில்லை. முஸ்­லிம்கள் எமது(சிங்­கள) மக்­களை நஞ்­சூட்டி விட்­டனர் என்­பது எல் ­லோரும் அறிந்த உண்­மை­யாகும். எமது மக்­களை அழிப்­ப­தற்கு அவர்கள் திட்­ட­மிட்டு வந்­துள்­ளனர். ஆகவே பௌத்­தர்கள் தம்மைத் தாமே பாது­காப்பது முக்­கி­ய­மா­னது.  

முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான கடை­களில் வாங்கும் உண­வு­களை உண்­பதால் இளம் சந்­த­தி­யினர் மல­டு­க­ளாக ஆகி­

வி­டுவர். மாத்­த­ளையைச் சேர்ந்த ஒரு வைத்­தியர் எமது நூற்­றுக்­க­ணக்­கான சிறு­வர்­களை அழித்­து­விட்டார். இத்­த­கைய வைத்­தி­யர்கள் கல்­லெ­றிந்து கொல்­லப்­பட வேண்டும் என்று இங்கு சிலர் பேசி­னார்கள். இது நடக்க ­வேண்டும் என்று நான் சொல்­ல­வில்லை. ஆனால் அவ்­வாறு தான் நடக்­க­ வேண்டும்.

எமது மக்­களில் எவ­ரா­வது இவ்­வாறு அவர்­க­ளுக்கு (முஸ்­லிம்­க­ளுக்கு) எதி­ராக தவறு செய்தால் நாம் துண்­டு­க­ளாக வெட்டிக் கொல்­லப்­பட்­டி­ருப்போம். சமல் ராஜ­பக்ஷ இந்­­நாட்டில் எதிர்­கால ஜனா­தி­பதி என்ற  நல்ல செய்தி ஒன்றைக் கேள்­விப்­பட்டேன். இதனை நான் முதலில் கேள்­விப்­ப­ட­வில்லை. ஆனால் இப்­போது கேள்­விப்­பட்டு மகிழ்ச்­சி­ய­டைந்தேன். நாட்டை மீளக் ­கட்­டி­யெ­ழுப்­பவும் பாது­காக்­கவும் மயந்­தவும் கட்சி மாற வேண்டும் என்று தெரி­வித்­தி­ருந்தார்.  

ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்கவும் கலந்துகொண்ட நிகழ்விலேயே தேரர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே   அமைச்சர் மங்கள சமரவீர இந்தக் கருத்தை  தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருக்கின்றார்.

பகிரவும்...