Main Menu

அவசரகாலச் சட்டம் மீண்டும் ஒரு மாதகாலம் நீடிப்பு

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களின் பின்னா் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிக்கப்பட்டு விசேட வா்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த மாதம் ஏப்ரல் 22 ஆம் திகதி முதல் இன்று வரை ஒரு மாத காலம் மே மாதம் 22 ஆம் திகதி வரை குறித்த அவசரகால சட்டம் அமுலில் இருந்த நிலையில் அதன் காலம்  நிறைவடைந்து மீண்டும் குறித்த அவரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது, அது இன்று ஜூன் மாதம் 22 ஆம் திகதியுடன் நிறைவடைகின்ற நிலையில், மேலும் ஒரு மாதத்திற்கு குறித்த அவசரகாலச் சட்டத்தை நீடித்து இன்றைய தினம் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இன்று 22 ஆம் திகதி தொடக்கம் அவரகால சட்டத்தை ஒரு மாதகாலத்திற்கு நீடித்து  விசேட வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...