Main Menu

ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பயனற்றது என்று மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்- ரோஹித ராஜபக்ஷ

ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பயனற்றது என்று மக்கள்  தற்போது குற்றம் சாட்டுகிறார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மூன்றாவது மகன் ரோஹித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாண்டுவஸ்னுவர குடிநீர் திட்டத்திற்கு ரோஹிதா ராஜபக்ஷ நேற்று (புதன்கிழமை) அடிக்கல் நாட்டி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து  குறித்த நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  இதன்போது ரோஹித ராஜபக்ஷ, “எனக்கு தனிப்பட்ட வேலைகள் காணப்பட்டாலும் மக்களுக்கு சேவை செய்வற்காக நேரத்தை ஒதுக்கியுள்ளேன்.

மேலும் தற்போது மக்கள், அரசாங்கமும் ஜனாதிபதியும் மற்றும் நாங்கள் அனைவரும்,  எந்ததொரு வினைத்திறனான செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை என குற்றம் சுமத்துகின்றனர்.

இதற்கு காரணம், எங்களினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டம் தொடர்பாக மக்களின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படாதமையே இதற்கு காரணமாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...