Main Menu

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார் ரஞ்சன்!

கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாக உள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அறிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் அறிவித்த சபாநாயகர், நாடாமன்றத் தேர்தல் சட்டத்தின்படி ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதை இரத்து செய்வதாக நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தேர்தல் ஆணையத்தின் தலைவருக்கு தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டார்.

பகிரவும்...