Main Menu

சாரா ஹல்டனுடன் ரெலோ உறுப்பினர்கள் சந்திப்பு

பிரித்தானியாவின் இலங்கைக்கான தூதுவர் சாரா ஹல்டனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் குறித்த சந்திப்பு இடம்பெற்றதாக கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவின் ஊடகப் பேச்சாளர் கு.சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பின் போது ஐ.நா. மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள், அரசியல் தீர்வு, மாகாண சபை தேர்தல்கள், நில அபகரிப்பு, அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பேசப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சுமார் இரண்டு மணி நேரம் இடம்பெற்றிருந்த இந்த சந்திப்பில் ரெலொவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் மற்றும் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...