இலங்கை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் முன்னிலையானார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். அரசு பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிரான முறைப்பாட்டின் விசாரணை முன்னேற்றங்களை இன்றுமேலும் படிக்க...
16 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே சமூக ஊடகப் பயன்பாட்டைக் குறைக்க அரசு திட்டம்

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகப் பாவனையைக் குறைப்பதற்கான முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (08) நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்குமேலும் படிக்க...
நுவரெலியாவில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்து

நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்தின் பின்புற நிறுத்துமிடத்தில், இன்று (08) காலை, தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பயணிகளை இறக்கிவிட்டு, நிறுத்துமிடத்தை நோக்கி பின்னோக்கிச் செல்லும் போது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால்மேலும் படிக்க...
சிறைச்சாலை அதிகாரிகளின் உடலங்களுக்கு நீதி அமைச்சர் அஞ்சலி

கடமையின் போது துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு முகங்கொடுத்து உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடலங்களுக்கு நீதி அமைச்சர் நேரில் சென்று தனது இறுதி மரியாதையை செலுத்தியுள்ளார். உயிரிழந்த அதிகாரிகளின் உடலங்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் அங்கு கூடியிருந்த சக சிறைச்சாலை அதிகாரிகள் கண்ணீர் மல்கமேலும் படிக்க...
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்த மேலும் ஒரு அதிகாரி உயிரிழப்பு

கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் இந்த மோதலில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 6மேலும் படிக்க...
கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் கடமை! ஐ.நா வலியுறுத்தல்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவம் குறித்து, இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-எண்ட்ரே பிராஞ்ச் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபை விடுத்துள்ள அறிக்கையில், இந்தத் துயரச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தனது இரங்கலைத் தெரிவித்துக்மேலும் படிக்க...
மட்டு சிறையில் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதி

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தனது கழுத்தை பிலேற்றால் அறுத்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று (7) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். அக்கரைப்பற்றைச் சேர்ந்த 24மேலும் படிக்க...
நீர்கொழும்பு சிறை சம்பவம் – பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து சிறைத்துறை ஆணையர் நாயகம் விளக்கம்

நேற்றையதினம் (06) நீர்கொழும்பு சிறையில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்த உண்மைகளை சிறைத்துறை ஆணையர் நாயகம் இன்று (07) தெளிவுபடுத்தினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்மேலும் படிக்க...
அவசர ஒத்திவைப்பு விவாதமொன்றை கோரியுள்ள எதிர்க்கட்சி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்கள் குறித்து பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவருவதற்காக, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அவசர ஒத்திவைப்பு விவாதமொன்றைக் கோரி சபாநாயகருக்குக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. இதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ரஞ்சித் மத்தும பண்டார, கபீர்மேலும் படிக்க...
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலுக்குக் காரணமான சுரேஷ், பூஸ்ஸ சிறைக்கு மாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலுக்குக் காரணமானவர் எனக் கூறப்படும் ‘கட்டுவெல்லேகம சுரேஷ்’ என்பவர் பூஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தற பத்மே’ என்பவரின் நெருங்கிய கூட்டாளி எனக் கூறப்படும் கட்டுவெல்லேகம சுரேஷ் மீது, கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்துதல்,மேலும் படிக்க...
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் – உயிரிழப்பு எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதியில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மோதலில் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார், அதன்படி, 07 சிறைச்சாலை அதிகாரிகள்மேலும் படிக்க...
இந்த ஆண்டில் இதுவரை வீதி விபத்துகளில் 1,424 பேர் உயிரிழப்பு

இந்த ஆண்டு இதுவரை நாடு முழுவதும் பதிவான வீதி விபத்துக்களில் மொத்தம் 1,424 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேசிய விபத்துத் தடுப்பு வாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய போக்குவரத்து கட்டுப்பாடுமேலும் படிக்க...
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பாட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்

நீர்கொழும்பு, சிறைச்சாலையில் ஏற்பட்டிருந்த அமைதியின்மையை பாதுகாப்புப் படையினர் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். சிறைச்சாலையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பெருமளவிலான பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) வீரர்களும் அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும், பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுமேலும் படிக்க...
பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு – சம்பவத்துக்கு பொறுப்பேற்றார் நீதி அமைச்சர்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுக்கு விடயதான அமைச்சர் என்ற ரீதியில் தாம் முழுமையான பொறுப்பை ஏற்பதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். அதற்கமைய, உயிரிழந்தவர்களின்மேலும் படிக்க...
கைது நடவடிக்கையைத் தடுக்க கோட்டாபயவின் மனு

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தனது கைது நடவடிக்கையைத் தடுக்கும்படி கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள ரிட் மனுவை உச்ச நீதிமன்றத்திற்குப் பரிந்துரைக்குமாறு சட்டமா அதிபர் இன்று (06) மேல்முறையீட்டு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார். இன்றுமேலும் படிக்க...
நீர்கொழும்பு சிறை மோதல்: CCD மற்றும் CID விசாரணை ஆரம்பம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்த விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) இணைந்து ஆரம்பித்துள்ளன. இதற்கான நீதிமன்ற உத்தரவும் தற்போது பெறப்பட்டுள்ளது. நேற்று (05) மற்றும் இன்று (06) இடம்பெற்ற வன்முறைச்மேலும் படிக்க...
நீர்கொழும்பு சிறையிலிருந்து கைதிகள் கண்டிக்கு அவசர இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த கைதிகளில் ஒரு தொகுதியினர், கண்டி பல்லேகலையில் அமைந்துள்ள போகம்பர திறந்தவெளி சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். நேற்று (05) நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளின் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் இன்று (06) தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கைதிகள் சிலரைமேலும் படிக்க...
கடவுச்சீட்டு அலுவலகத்தின் துணை கட்டுப்பாட்டாளர் கைது

போலி வெளிநாட்டுக் கடவுச்சீட்டு தயாரிப்பதற்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக, குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் பிரதி கட்டுப்பாட்டாளர் கொழும்பு மோசடி புலனாய்வுப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் உள்ள சென்னையில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்மேலும் படிக்க...
நீர்கொழும்பு சிறைச் சாலைக்குள்ளான வன்முறை 26 பேர் உயிரிழப்பு

நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார, சற்று நேரத்திற்கு முன்னதாக நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு வருகை தந்துள்ளார். இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். இதன்படி, 7 சிறைச்சாலைமேலும் படிக்க...
சிறைச்சாலை முன்னாள் அத்தியட்சகருக்கு குற்றப்பத்திரிகை கையளிப்பு

வெசாக் புண்ணிய தினத்தை முன்னிட்டு வழங்கப்படும் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ், போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து கைதி ஒருவரை சட்டவிரோதமான முறையில் சிறைச்சாலையிலிருந்து விடுவித்த சம்பவத்துடன் தொடர்புடைய அனுராதபுரம் சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் மொஹான் கருணாரத்னவுக்கு சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை வாசித்துக்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- …
- 467
- மேலும் படிக்க
