இலங்கை
முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து 203 பேர் விடுவிப்பு!
முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு விமானப்படைத் தளத்தின் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த 203 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தியாவின் புத்தகயாவுக்கு யாத்திரைக்காக சென்று நாடு திரும்பிய 203 பேர் கொரோனா அச்சம் காரணமாக அங்கு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில்மேலும் படிக்க...
“பொதுமக்கள் பொருளாதார ரீதியில் பாதிப்புக்களை எதிர்கொள்வதற்கு இடமளிக்கக் கூடாது”
நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள், பொருளாதார ரீதியில் பாதிப்புக்களை எதிர்கொள்வதற்கு இடமளிக்கக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில்மேலும் படிக்க...
தேர்தலை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் ஜனாதிபதி இருந்தமையே இந்நிலைக்கு காரணமாயிற்று – சுமந்திரன்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எப்படியாவது தேர்தலை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தமையினாலேயே நாம் இந்த நிலைக்கு முகம் கொடுத்திருக்கின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். டெய்லி மிரர் பத்திரிக்கைக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர்மேலும் படிக்க...
மீண்டும் நாடாளுமன்றத்தை கூட்டுவது பொதுத்தேர்தல் குறித்து இந்த வாரம் தீர்மானம்.!
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியபடி ஜூன் மாதம் முதல் வாரத்திற்கு முன்னர் புதிய நாடாளுமன்றத்தை கூட்ட இயலாமையால் எழும் பிரச்சினைகள் குறித்து உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை நாடுவதற்கான முடிவு தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த வாரம் தீர்மானம்மேலும் படிக்க...
ஊரடங்குச் சட்ட அனுமதி பத்திரத்தை முறையற்ற விதத்தில் பயன் படுத்துவோருக்கு கடுமையான சட்டம்
ஊரடங்குச் சட்ட அனுமதி பத்திரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவோருக்கு எதிரான சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க மாத்திரம் ஊரடங்குச் சட்ட அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதை மீறி செயற்படுவோரை கைது செய்ய உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும் படிக்க...
40 பேர்கள் கொண்ட குழு விடுவிப்பு
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்துள்ள 40 பேர்கள் கொண்ட குழுவினர்களை யாழ் கொடிகாமம் விடத்தற்பளையில் பகுதியில் கடந்த 5 ஆம் திகதி யாழ்பாதுகாப்பு படைப்பிரிவினால் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர் குறித்த நபர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உட்பட்டியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் 14 நாட்கள்மேலும் படிக்க...
நாளை முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம்
கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம், கண்டி, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடரும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேபோல் ஏனைய மாவட்டங்களுக்கு நாளை காலை 6 மணிக்கு தளர்ந்தப்படவுள்ள ஊரடங்குமேலும் படிக்க...
இலங்கையில் உச்சம் கொடுக்கின்றது சூரியன்!
இலங்கையில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் ஜனவரி 14ஆம் திகதி வரையில் சூரியன் அகலாங்குகளுக்கு மேலாக உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளை நண்பகல் 12.13 மணிக்கு அம்பலங்கொடை, தல்கஸ்வல, பஸ்கொட, மித்தெனிய, உஸ்வெவ மற்றும் வீரவிலமேலும் படிக்க...
இன்று வரையான காலப்பகுதியில் 2961 கைதிகள் பிணையில் விடுதலை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரையின் படி நீதிமன்ற உத்தரவில் 2691 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல் இன்று (சனிக்கிழமை) வரையான காலப்பகுதியில் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி சிறைச்சாலை வளாகத்திற்கு மேற்கொண்டமேலும் படிக்க...
கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் குணமடைந்தார்!
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார். இந்நிலையில் இலங்கையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 25 ஆக உயர்வடைந்துள்ளது என சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது. மேலும், தற்போது இலங்கையில் கொரோனா தொற்றியோர் என அடையாளம் காணப்பட்டுள்ள 159 பேரில் 129மேலும் படிக்க...
ஊரடங்கு உத்தரவு 3 மாதங்களுக்குத் தொடரவேண்டும் எனக் கோரிக்கை!
நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த குறைந்தபட்சம் 3 மாதங்களாவது ஊரடங்கு உத்தரவு தொடர வேண்டும் என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் வைத்தியர் ஜெயருவன் பண்டாரா தெரிவித்துள்ளார். அதை நடைமுறைப்படுத்த முடியாவிட்டால், மக்கள் ஊரடங்கு உத்தரவை மீறாமல் குறைந்தது ஒருமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் – ஊடகங்களுக்கான அறிவுறுத்தல் அறிக்கை வெளியானது!
கொரோனா வைரஸ் குறித்த செய்தியினை வெளியிடும் போது ஊடகங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த தெளிவுபடுத்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. காதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சினால் இதுகுறித்த பரிந்துரை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கொரோனா வைரஸ் பரவும் இக் காலகட்டத்தில்மேலும் படிக்க...
பொது சுகாதார பரிசோதகர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு!
பொது சுகாதார பரிசோதகர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு சுகாதார அமைச்சினால் தீர்வு வழங்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான சேவைகளில் ஈடுபட்டுள்ள தாம் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்வு வழங்கப்படாவிட்டால் நாளை முதல் அனைத்து சேவைகளிலிருந்தும் விலகிக் கொள்வதாக பொதுமேலும் படிக்க...
உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை
ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இலங்கை விமானப் படைக்கு உக்ரைனிலிருந்து மிக் ரக விமானங்களைக் கொள்வனவு செய்த போது, முறையற்ற வகையில் தலையீடு செய்து, கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின்மேலும் படிக்க...
பொதுத்தேர்தல் குறித்து உயர் நீதிமன்றின் ஆலோசனையை பெறுமாறு ஜனாதிபதிக்கு அறிவிப்பு!
பொதுத்தேர்தல் குறித்து உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளர் பேராசிரியர் பி.பீ.ஜயசுந்தவிற்கு கடந்த 1ஆம் திகதி சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அனுப்பி வைக்கப்பட்டுள்ளமேலும் படிக்க...
இன, மத, கட்சி பேதம் இன்றி அனைவரும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக செயற்பட வேண்டும் – பிரதமர்!
அனைத்து மக்களும் இன, மத, கட்சி பேதம் இன்றி சுகாதார அமைச்சு விடுக்கும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக செயற்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நேற்றுமேலும் படிக்க...
தகுதியற்றவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!
ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரத்தை தகுதியற்றவர்களுக்கு வழங்கும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளமை தொடர்பாக அதிகளவானமேலும் படிக்க...
இலங்கை ‘3A’ என்ற கட்டத்தில் இருந்து ‘3B’ இற்குச் சென்றால் பெரும் ஆபத்து- மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!
உலக சுகாதார ஸ்தாபனத்தின் வகைப்படுத்தலுக்கு அமைய கொரோனா வைரஸ் பரவலில் இலங்கை ‘3A’ என்ற கட்டத்திலுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் எதிர்வரும் இரு வாரங்களில் அபாயகரமான அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்ல நேரிடும்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 148 அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 27 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் மூவர்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 163
- 164
- 165
- 166
- 167
- 168
- 169
- …
- 256
- மேலும் படிக்க