இலங்கை
ஊடகவியலாளர் அமரர் லசந்த விக்ரமதுங்கவின் 16 ஆவது ஆண்டு நினைவு தினம்

கொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் அமரர் லசந்த விக்ரமதுங்கவின் 16 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று 8 ஆம் திகதி புதன்கிழமை காலை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம் பெற்றது. கொலை செயய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவு தூபியில் மட்டக்களப்பு மாவட்டமேலும் படிக்க...
புலமைப்பரிசில் பரீட்சை – விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பமாவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பணிகள் எதிர்வரும் 12 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளன. குறித்த பரீட்சையின் பெறுபேறுகளை 40 நாட்களுக்குள் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தரமேலும் படிக்க...
க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதமொன்றை நடத்த அரசாங்கம் எதிர்பார்ப்பு

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதமொன்றை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில்மேலும் படிக்க...
குரங்குகளின் அதிகரிப்பிற்கு மனிதர்களின் செயற்பாடே காரணம் – சூழலியல் நிபுணர் மெண்டிஸ் விக்ரமசிங்க

நாட்டில் மனிதர்களால் அதிகளவான உணவுகள் சூழலுக்கு விடுவிக்கப்படுகின்றமை குரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பில் தாக்கம் செலுத்தியுள்ளதாக சூழலியல் நிபுணர் மெண்டிஸ் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகமொன்றுக்கு இது தொடர்பில் கருத்துரைத்த அவர், பாரியளவில் உணவு விரயமாவதால் குரங்குகளின் தொல்லை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். உணவுக்மேலும் படிக்க...
பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் ; ஹர்ஷ டி சில்வா

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கத்திடம் உள்ள திட்டம் என்னவென்பதை மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும். வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வெற் வரி எவ்வாறு குறைக்கப்படும், அதனால் ஏற்படும் வருவாய் இழப்பை எவ்வாறு முகாமைத்துவம் செய்வது என்பதை அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும்மேலும் படிக்க...
ரணிலும் சஜித்தும் சந்திப்பு – ஐ.தே.கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைய வேண்டும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தல்

ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக்கட்சியும் ஒன்றிணைய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.அது தொடர்பில் நாம் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளோம். எதிர்காலத்தில் அந்த செயற்பாடுகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித்மேலும் படிக்க...
செனல் – 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில் முறையான விசாரணை – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளுக்கு மேலதிகமாக செனல் 4 தொலைக்காட்சியில் வெளியான ஆவணப்படத்தையும் அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கானமேலும் படிக்க...
அடுத்த வாரம் சீனா செல்கிறார் ஜனாதிபதி அநுர

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 12 ஆம் திகதி சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அனுரகுமார திஸாநாயக்க மேற்கொள்ளும் 2 ஆவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் இதுவாகும். இந்த பயணத்தின் போது அவர் சீன ஜனாதிபதி மற்றும்மேலும் படிக்க...
எந்தவொரு அதிகார அரசியல் நகர்விலும் பங்காளியாகச் செயற்படேன் ; கரு ஜயசூரிய
நாட்டு மக்களின் நலனை இலக்காகக்கொண்டு சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தினால் தற்போது மிகுந்த அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு அப்பால், தாம் எந்தவொரு அதிகார அரசியல் செயற்பாடுகளுக்கும் தலைமைத்துவத்தை வழங்கப்போவதில்லை என அவ்வியக்கத்தின் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஐக்கியமேலும் படிக்க...
ரஷ்ய படையில் இலங்கையர்கள் வலிந்து இணைப்பு குறித்து அந்நாட்டு வெளிவிவகார அமைச்சருடன் விரைவில் பேச்சு – பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா

ரஷ்யப்படையில் வடபகுதி இளைஞர்கள் வலிந்து இணைக்கப்பட்டுள்ளமை உட்பட இலங்கையர்கள் போரில் ஈடுபடுத்தப்படுகின்றமை தொடர்பில் ரஷ்ய வெளிவிவார அமைச்சருடன் அமைச்சர் விஜித ஹேரத் விரைவில் உத்தியோகபூர்வமான பேச்சுக்களை முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா போராட்டக்காரர்களுடனானமேலும் படிக்க...
Clean Sri Lanka வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் சிறிலங்கா அரசு முதலில் தன் மீது பதிந்துள்ள தமிழினப் படுகொலைக் கறையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்-யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர்

Clean Sri Lanka வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் சிறிலங்கா அரசு முதலில் தன் மீது பதிந்துள்ள தமிழினப் படுகொலைக் கறையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் சி.சிவகஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார் நீண்டகாலமாக விசாரணையின் பேரில்மேலும் படிக்க...
பல்கலை உப வேந்தர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

அரச பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகங்களில் நிர்வாகச் சிக்கல்கள், கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களின் வெற்றிடங்கள், மாணவர்களின் குடியிருப்புப்மேலும் படிக்க...
தமிழர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அரசியல் நல்லெண்ண சமிக்ஞைகளை NPP இதுவரை வெளியிடவில்லை -பேராசிரியர் ரகுராம்

ஈழத்தமிழர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒரு ஆக்கபூர்வமான அல்லது மனச்சுத்தியுடனான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான அறிகுறிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும் என பேராசிரியர் ரகுராம் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை மாமனிதர் குமார் பொன்னம்பலம் நினைவுப்பேருரையை ஆற்றிய பேராசிரியர் ரகுராம் இதனைமேலும் படிக்க...
சர்வ மதத் தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றார் சபாநாயகர்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன கடந்த சனிக்கிழமை (04) வரலாற்றுச் சிறப்பு மிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று வழிபட்டு ஆசிகளைப் பெற்றுக்கொண்டார். இந்த வழிபாட்டில் தியவடன நிலமே நிலங்க தேல பண்டாரவும் இணைந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து மல்வத்து மகா விகாரைக்குச்மேலும் படிக்க...
புதிய அரசமைப்பினை உருவாக்கும் முயற்சிகளை அரசாங்கம் தாமதமின்றி ஆரம்பிக்க வேண்டும் – கர்தினால் மல்கம் ரஞ்சித்
புதிய அரசமைப்பினை உருவாக்கும் முயற்சிகளில் அரசாங்கம் தாமதமின்றி ஈடுபடவேண்டும் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் புதிய அரசமைப்பினை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசாங்கம் தனது பதவிக்காலம்மேலும் படிக்க...
விசா பெறுவதில் இலங்கை 33வது இடத்தில்

பிராண்டு ஃபைனான்ஸ் (Brand Finance) அறிக்கையின் படி, இலங்கை, தெற்காசியாவின் சிறந்த இடமாக கொழும்பின் நற்பெயரையும், நாட்டின் போட்டித்திறனையும் மேம்படுத்தும் வகையில், விசாக்களை எளிதாகப் பெறுவதில் 33வது இடத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “35 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவுமேலும் படிக்க...
ஊடகங்களுக்கு அரசாங்கம் அச்சுறுத்தல் விடுப்பதை அனுமதிக்க முடியாது – ஐக்கிய மக்கள் சக்தி

ஊடகங்கள் முன்வைக்கும் விமர்சனங்களிலுள்ள யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள அரசாங்கம் முயற்சிக்க வேண்டும். அதனை விடுத்து ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதை அனுமதிக்க முடியாது. மாறாக பிழையான அல்லது போலி செய்திகள் வெளியிடப்பட்டால் அதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- …
- 442
- மேலும் படிக்க



