இலங்கை
தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர தடை போடாதீர்கள்- கட்சிகள் மாநாட்டில் கோரிக்கை!
தமிழ் மக்களின் உரிமைக்கான 30 வருட போராட்டத்தில் உயிரிழந்த மக்களையும், போராளிகளையும் நினைவுகூருவது தமிழ் மக்களின் கடமையும் உரிமையுமாகும் என தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இவ்வாறு நினைவுகூருவதை தடை விதிப்பதானது தமிழர்களின் உாிமைகளை மறுதலிப்பதாகும்மேலும் படிக்க...
செங்கலடியில் பலரை மோதிச் சென்ற கார்- ஒருவர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்!
மட்டக்களப்பு, செங்கலடி நகரில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று விபத்தை ஏற்படுத்தியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர். செங்கலடி எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்னால் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை வேகக் கட்டுப்பாட்டை இழந்து பிழையான திசையில் சென்ற கார் வீதியால்மேலும் படிக்க...
நாடாளுமன்றத்தில் 22ஆம் திகதி முன் வைக்கப் படுகின்றது 20 ஆவது திருத்தச் சட்டமூலம்!
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் எதிர்வரும் 22ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் 22 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது. இதன்போது முதலாம்மேலும் படிக்க...
அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தயாராகின்றது ஹக்கீம், ரிஷாட், திகாம்பரம் தரப்பு?
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோரின் கட்சிகள் ஆதரவளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிங்கள இணைய ஊடகமொன்று இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அரசாங்கத்தின் உயர்மட்டத்துடன் இவர்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
ஐ.நா.வின் போர்க் குற்றச்சாட்டுகளை ஒருபோதும் ஏற்க மாட்டோம் – ரமேஷ் பத்திரண
ஐ.நா.வின் போர்க்குற்றச்சாட்டுகளை ஒருபோதும் ஏற்கமாட்டோம் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இலங்கைப்படையினருக்குமேலும் படிக்க...
எதிர்காலத்தில் தேர்தல்கள் வணிக ரீதியாக மாற்றமடையும் அபாயம்- உமாச்சந்திரா பிரகாஸ்
20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தில் இரட்டைப் பிரஜாவுரிமைகள் கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமையானது, எதிர்காலத்தில் தேர்தல்கள் வணிக ரீதியாக மாற்றமடையும் அபாயம் உள்ளதாக முன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினர் உமாச்சந்திரா பிரகாஷ் தெரிவித்துள்ளார். 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக ஆதவனுக்கு கருத்துத்மேலும் படிக்க...
இலங்கையில் காணாமல் போனவர்கள் குறித்து கனடா பிரதமரிடம் தமிழ் செயற் பாட்டாளர்கள் முக்கிய கோரிக்கை!
இலங்கையில் காணாமல்போனவர்கள் விவகாரத்தில் கனடாவில் சில சட்ட ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சட்டக் கோட்பாட்டு மாற்றங்களைச் செய்துதர வேண்டுமென கனடாவில் உள்ள தமிழ் செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதன்படி, இறைமையுள்ள நாடு அல்லது அதன் தலைவருக்கு எதிராக இன்னொருமேலும் படிக்க...
விக்னேஸ்வரன் – டெனிஸ்வரன் வழக்கு முடிவிற்கு வந்தது!
வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சுமுகமாக தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன், நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறியும் அதற்கு மன்னிப்புக்கோர வேண்டுமெனவும் மேலும்மேலும் படிக்க...
ஐ.நா. உயர்ஸ்தானிகரின் கருத்துக்கள் தேவையற்றவை- இலங்கை அரசாங்கம்
முன்மொழியப்பட்ட 20ஆவது திருத்தம் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட்டின் கருத்துக்கள் தேவையற்றவை மற்றும் அனுமானத்தின் அடிப்படையிலானவை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 45ஆவது அமர்வில் நிகழ்ச்சி நிரல் இரண்டின் கீழான பொதுமேலும் படிக்க...
தியாகி திலீபனின் நினைவு நிகழ்வுகளுக்கு கிளிநொச்சியிலும் நீதிமன்றம் தடை!
கிளிநொச்சி மாவட்டத்தில் தியாகி திலீபனின் நினைவு நிகழ்வுகளை நடத்தக்கூடாது என கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாவட்ட அலுவலகமான அறிவகத்திற்கு இன்று (புதன்கிழமை) சென்றிருந்த கிளிநொச்சி பொலிஸ் நிலைய தலைமைமேலும் படிக்க...
சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை!
நீதிமன்றத் தடை உத்தரவையும் மீறி தியாகி திலீபனுக்கு நினைகூரல் நிகழ்வு நடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு கடும் எச்சரிக்கையின் பின்னர் பிணை வழங்கி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், அவருடன் கைதுசெய்யப்பட்டமேலும் படிக்க...
தரிஷா பஸ்டியன் தொடர்ந்தும் துன்புறுத்தப்படுவது குறித்து ஐ.நா. அறிக்கையாளர்கள் கவலை
சிரேஷ்ட ஊடகவியலாளர் தரிஷா பஸ்டியன் தொடர்ந்தும் துன்புறுத்தலுக்குள்ளாவது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர்கள் ஐந்து பேர் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர்கள், தரிசா பஸ்டியன் தனது எழுத்துக்களிற்காகவும் இலங்கையில் மனிதமேலும் படிக்க...
பிரபாகரனின் முடிவினால் திலீபன் உண்ணாவிரம் இருக்கவில்லை – கமால் குணரட்ணவின் கருத்திற்கு ஐங்கரநேசன் பதில்
திலீபன் உண்ணாவிரதம் இருந்தமை தலைவர் பிரபாகரனின் முடிவோ தெரிவோ அல்ல என்றும் அவர் சுயமாகவே இந்த முடிவை எடுத்துத் தலைவரிடம் அதற்கானஒப்புதலைப் பெற்றிருந்தார் என்றும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். திலீபன் ஒரு அரசியற் போராளிமேலும் படிக்க...
அஞ்சலி செலுத்தும் உரிமை மறுப்பு : சாத்வீக ரீதியில் போராட மாவை அழைப்பு
தமிழ் மக்களின் அடிப்படை உரிமையான அஞ்சலி செலுத்தும் உரிமை மறுக்கப்படுவது தொடர்பாக சாத்வீக ரீதியில் போராடுவதற்கு மாவை சேனாதிராஜா அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இன்று யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்ற அனைத்து கட்சிகள் கூட்டத்தில் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்மேலும் படிக்க...
திலீபனின் நினைவேந்தலுக்கு தடை- ஒன்றுகூடும் தமிழ்க்கட்சிகள்!
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விடயம் குறித்து ஆராய்வதற்காக யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழ்க் கட்சிகள் ஒன்றுகூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி அடுத்தகட்ட நகர்வை எவ்வாறு மேற்கொள்வதுமேலும் படிக்க...
முதியவரிடம் சென்று முறைப் பாட்டைப் பெற்றுக் கொண்ட பொலிஸ் பொறுப்பதிகாரி!
முதியவரின் காலடிக்கு வந்து முறைப்பாட்டைப் பெற்றுக் கொண்ட ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரியின் செயல் பாராட்டப்படுகிறது. நேற்று (திங்கட்கிழமை) ஏறாவூர் பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடளிப்பதற்காக ஒரு முதியவர் தள்ளு முச்சக்கர சைக்கிளில் பொலிஸ் நிலைய வாயிலை அடைந்தார். இதன்போது வரவேற்பறையில் இருந்தமேலும் படிக்க...
தியாகி திலீபனின் நினைவேந்தல் வாரம் ஆரம்பம் – யாழில் அமைக்கப்பட்ட உருவப்படங்கள் அகற்றப்பட்டன
யாழ்ப்பாணம் – நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த உருவப்படம் உள்ளிட்ட நினைவேந்தல் பதாதைகள் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளன. தியாக தீபம் திலீபனின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகின்றது. இந்த நிலையில் நீதிமன்றத் தடையை நேற்றுப் பெற்றிருந்தமேலும் படிக்க...
திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டித்த குற்றச்சாட்டு – சிவாஜிலிங்கம் கைது
நீதிமன்ற தடையை மீறி தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டித்த குற்றச்சாட்டில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பாகியுள்ளது. இந்நிலையில், குறித்தமேலும் படிக்க...
50 ஆயிரம் பட்டதாரிகளுக்கான பயிற்சித் திட்டம் இன்று முதல் ஆரம்பம்
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு எனும் கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக அரச சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட 50,000 பட்டதாரிகளுக்கான திசைமுகப்படுதல் பயிற்சித் திட்டம் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக பாதுகாப்புப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவின் வழிகாட்டுதலில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- …
- 256
- மேலும் படிக்க