இலங்கை
மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் மொத்தமாக 103 பேருக்கு கொரோனா
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,513ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் இதுவரையில் மொத்தமாக 103 பேருக்குமேலும் படிக்க...
யாழ் பல்கலை மாணவர்கள் 9 பேர் தனிமைப் படுத்தலில்!
கம்பஹாவில் இருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அண்மைய நாள்களில் வருகை தந்த 9 மாணவர்களின் மாதிரிகள் இன்று (05) மாலை பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரியால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த 9 மாணவர்கள் அவர்கள்மேலும் படிக்க...
யாழ் வட்டுக்கோட்டையில் பட்டப்பகலில் வீடு புகுந்து பெரும்தொகையான நகை,பணம் திருட்டு!
வட்டுக்கோட்டை வடக்கு, சித்தன்கேணியில் வீட்டில் உள்ளவர்கள் கோயிலுக்குச் சென்றிருந்த நிலையில் பட்டபகலில் வீடு புகுந்து 10 பவுண் நகைகள் மற்றும் 9 ஆயிரம் பணம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணிக்கும் மாலை 4மேலும் படிக்க...
வவுனியா சுற்றுலா மையத்திற்கு எதிராக சுவரொட்டிகள்!
வவுனியா குளத்துபகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா மையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பல்வேறு இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. வவுனியா குளத்திற்கான மக்கள் செயலணி என்று உரிமைக்கோரப்பட்டு ஒட்டப்பட்டுள்ள குறித்த சுவரொட்டியில் வவுனியா நகரசபையே வவுனியாக்குளத்தை கூறுபோட்டு விற்காதே,நீர்பாசன திணைக்களமே குளத்தை காப்பாற்ற வேண்டியவர்களேமேலும் படிக்க...
ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார் மைத்திரிபால சிறிசேன
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சாட்சியமொன்றை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. குறித்த அழைப்புக்குமேலும் படிக்க...
20 வது அரசியலமைப்பு தொடர்பில் முற்றுமுழுதான இணக்கப்பாடு இல்லை – எம்.ஏ.சுமந்திரன்
20 வது அரசியலமைப்பு தொடர்பில் முற்றுமுழுதான இணக்கப்பாடு இல்லை என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சிலர் தங்களுக்கு கூறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்தோடு குறித்த அரசியலைமைப்பை பாராளுமன்றத்தில் தடுப்பதற்கான நடவடிக்கையை நிச்சயம் எடும்போம்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் பணிபுரிந்த ஆடை தொழிற்சாலைக்கு சீல் வைப்பு
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் பணிபுரிந்த ஆடை தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக அப்பிரதேச சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யகாதுவ பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு முன்னணி ஆடைத் தொழிற்சாலையிலேயே குறித்த பெண் பணி புரிந்து வந்துள்ளமையினால், குறித்த ஆடை தொழிற்சாலைக்கு தற்போது சீல்மேலும் படிக்க...
மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிப்பு
திவுலபிடிய மற்றும் மினுவங்கொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதியான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். திவுலபிடிய பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவருக்கே இவ்வாறு கொரோனாமேலும் படிக்க...
20 வது திருத்தத்தையும் மக்களுக்கு நன்மை பயக்குமாறு செய்து தருவோம்! – கே.கே. மஸ்தான்
20 வது திருத்தத்தையும் மக்களுக்கு நன்மை பயக்குமாறு செய்து தருவோம் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. மஸ்தான் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானின் வேண்டுகோளின் பேரில், ஜனாதிபதியின் விசேட வீதி அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் நாடு தழுவியமேலும் படிக்க...
திவாலப்பிட்டிய கொரோனா எதிரொலி – 400 பேருக்கு PCR சோதனை
கம்பஹா, திவுலபிடிய பகுதியில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) நோயாளியாக இனம் காணப்பட்ட பெண்ணுடன் தொடர்புடைய சுமார் 400 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 400 பேருக்கும் பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.மேலும் படிக்க...
யாழில் அனைத்து மாநகர முதல்வர்களுக்கான மாநாடு
அனைத்து மாநகர முதல்வர்களுக்கான மாநாடு யாழில் இன்று ஆரம்பமானது. முதல்வர்கள் மன்றத்தினால், வருடாந்தம் நடாத்தப்படும் இந்த மாநாடு இம்முறை யாழில் நடைபெறுகின்றது. யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் இன்று (04) காலை 9 மணி அளவில் இந்த மாநாடுமேலும் படிக்க...
அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் மாவட்ட ஊடகப் பிரிவு கிளிநொச்சியில் திறப்பு!
அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் மாவட்ட ஊடகப் பிரிவின் கிளிநொச்சி அலுவலகம் வெகுஜன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் திறந்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஊடகப் பிரிவே இன்று (சனிக்கிழமை)மேலும் படிக்க...
புங்குடுதீவு பூசகர் கொலை: சந்தேகநபர்கள் வாக்குமூலம் அளிப்பு- சீ.சீ.ரீ.வி. பதிவும் மீட்பு!
புங்குடுதீவு, ஊரதீவு சிவன் கோயில் பூசகரை கொலைசெய்த குற்றச்சாட்டில் மூவர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதன்போது, தாங்கள் மூவரும் மதுபோதையில் இருந்ததால் பூசகரை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டோம் எனவும் அதனால், அவர் மயங்கிச்மேலும் படிக்க...
நாட்டுக்கு பொருத்தமான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்- பிரசன்ன ரணதுங்க
20 ஆவது திருத்தச்சட்ட மூலம் நிறைவேறிய பின்னர் நாட்டுக்கு பொருத்தமான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். நுவரெலியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறுமேலும் படிக்க...
சட்ட விரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 300 இற்கு அதிகமாக வாகனங்கள்
சட்ட விரோதமான முறையில் இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 300 இற்கு அதிகமாக வாகனங்களை சுங்க திணைக்களத்தினர் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்குள் குறித்த வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதைமேலும் படிக்க...
மகாத்மா காந்தியின் 151ஆவது ஜனன தின நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு
மகாத்மா காந்தியின் 151ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கொழும்பு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் நேற்று (02) அலரி மாளிகையில் அவரது உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினர். இந்தியாவின் தந்தை என போற்றப்படும் மகாத்மா காந்தி இந்தியமேலும் படிக்க...
“ஒரே நாடு-ஒரே சட்டம்” என்ற கொள்கை ஒரு கேலி-கூத்தாக தெரிகிறது – மனோ கணேசன்
1970/80 களில் இலங்கை அரசுக்கும், இராணுவத்துக்கும் எதிராக ஆயுதம் தூக்கிய, ஜேவிபியின் தேசப்பிரேமி இயக்க போராளிகள் இன்று தெற்கில் பகிரங்கமாக நினைவுகூறப்படும் போது, அதே வரப்பிரசாதம் வடக்கில் தமிழருக்கு இல்லை? இதனால், இந்த அஈசாங்கம் இப்போது அடிக்கடி சொல்லும், “ஒரே நாடு-ஒரேமேலும் படிக்க...
கெஹெலிய ரம்புக்வெல, யாழேந்திரன் ஆகியோர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஆகியோர் இன்று யாழ்ப்பாணம் விஜயம் செய்கிறார்கள். வடக்கில் தமிழ்மொழி பேசும் ஊடகவியலாளர்களின் தொழில் துறையுடன் சம்பந்தப்பட்ட தேவைகளை ஆராய்வதற்காக கண்காணிப்பு விஜயமாக இது அமைந்துள்ளதாக ஊடக அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது. விஜயத்தின் போதுமேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – மைத்திரி, ரணிலுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் – சரத் பொன்சேகா
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகமேலும் படிக்க...
வவுனியாவில் தனிமைப் படுத்தப்பட்ட 182 பேர் விடுவிப்பு!
ஜோர்தானில் இருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா வேலங்குளம் விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 182 பேர் இன்றைய தினம் (02) விடுவிக்கப்பட்டனர். கொவிட்-19 வைரஸ் தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாடுகள் அரசினால்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- …
- 256
- மேலும் படிக்க