இலங்கை
விக்னேஸ்வரனின் கருத்து ஒட்டுமொத்த தமிழர்களின் கருத்தல்ல- சரத் வீரசேகர
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிடும் கருத்துக்களை இலங்கை வாழ் தமிழ் மக்களின் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது என இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, பயனற்ற விதத்தில் உள்ள மாகாண சபைத் தேர்தலால் எவ்விதமேலும் படிக்க...
அரசியல் அமைப்பின் 20ஆவது திருத்த வரைபை ஆராய சிறப்புக் குழு நியமனம்!
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்காக முன்மொழியப்பட்ட வரைபை ஆராய இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சிறப்புக் குழுவொன்றினை நியமித்துள்ளது. சிரேஷ்ட உறுப்பினர்கள் அடங்கிய இந்தக் குழு நிஹால் ஜெயமன்ன தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் இக்ராம் மொஹமட், எம்.எம்.சுஹைர், எல்.எம்.கே.அருளானந்தம், பிரசாந்த லால் டிஅல்விஸ்,மேலும் படிக்க...
எதிர்கால திட்டங்களை வடிவமைத்து கோப்பு வடிவில் வைத்திருப்பதில் எந்த விதமான அர்த்தமும் இல்லை – ஜனாதிபதி
எதிர்கால திட்டங்களை வடிவமைத்து கோப்பு வடிவில் வைத்திருப்பதில் எந்தவிதமான அர்த்தமும் இல்லையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவ்வாறு வடிவமைக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த வேண்டும் எனவும் அவற்றை செயற்படுத்துவதே இராஜாங்க அமைச்சர்களின் பொறுப்பு எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மற்றும் இராஜாங்கமேலும் படிக்க...
பயங்கரவாதத்தை ஒழிக்க ஆறுமுகம் தொண்டமான் ஆதரவளித்தார்- மஹிந்த
நாட்டை பிரிக்கும் சக்திகளுக்கு எதிராக செயற்பட்ட ஆறுமுகம் தொண்டமான், அனைத்து சந்தர்ப்பங்களிலும் பயங்கரவாதத்தை ஒழிக்க அரசாங்கத்திற்கு ஆதரவளித்தார் எனபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் தொடர்பான அனுதாபப் பிரேரணைமேலும் படிக்க...
பதவியை இராஜினாமா செய்தார் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர்!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தன் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், சுயவிருப்புடனும் தனது பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அந்த வகையில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்மேலும் படிக்க...
சமூக மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே தற்கொலைகளை தடுக்க முடியும் – யமுனா நந்தா
சமூக மட்டத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதன் மூலமே வடபகுதியில் தற்கொலைகளை தடுக்க முடியும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி. யமுனா நந்தா தெரிவித்தார் உலக தற்கொலை தடுப்பு தினம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
20 ஆவது திருத்தத்தின் உள்ளடக்கங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் அவசியம் – முன்னாள் சபாநாயகர்
அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தின் உள்ளடக்கங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் அவசியம் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் மீது இன்னமும் கவனம் குவிக்கப்படாதமேலும் படிக்க...
20 ஆவது திருத்தத்தின் சில ஏற்பாடுகள் மூலம் நீதிமன்ற சுயாதீனத்துக்கு அழுத்தம் ஏற்படலாம் – சாலிய பீரிஸ்
20 ஆவது திருத்தத்தின் சில ஏற்பாடுகள் மூலம், நீதிமன்ற சுயாதீனம், சட்டத்தரணி தொழிலுக்கு அழுத்தம் ஏற்படக்கூடும் என சுட்டிக்காட்டி, ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். உயர் நீதிமன்றமேலும் படிக்க...
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 147 ஆக அதிகரிப்பு
இலங்கையில் மேலும் ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 147 ஆக அதிகரித்துள்ளது. சவுதி அரேபியாவிலிருந்து நாட்டிற்கு வருகை தந்த 5 பேருக்கே இவ்வாறு கொரோனா தொற்றுமேலும் படிக்க...
சத்துருக் கொண்டான் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவு தினம்
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக சத்துருக்கொண்டான் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியருகே இந்த நினைவேந்தல் நிகழ்வு நேற்று(புதன்கிழமை) மாலை நடைபெற்றது. படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உயிரிழந்தவர்களின்மேலும் படிக்க...
இலங்கையில் சுமார் ஒரு இலட்சம் பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் – கனடா எம்.பி.
இலங்கையில் 1980ஆம் ஆண்டுக்குப் பின்னரான கடந்த 40 வருடங்களில் சுமார் ஒரு இலட்சம் பேர் காணாமலாக்கப்பட்டுள்ளனர் என கனடாவின் கொன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Garnett Genuis தெரிவித்துள்ளார். இலங்கையில் காணாமலாக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கோரி கனடாவில் தமிழர்களால் முன்னெடுக்கப்படும் நீண்டமேலும் படிக்க...
தியாகி திலீபனின் நினைவு தினம் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேரணிக்கு தடை
தியாகி திலீபனின் நினைவு தினத்தினை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் முன்னெடுக்கப்படவிருந்த பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பாக வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றைச் செய்யவுள்ளதாக நகரசபை உறுப்பினர் ஜானுஜன் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும்மேலும் படிக்க...
20 ஆவது திருத்தம் நீதிமன்ற வழக்குகளில் இருந்து ஜனாதிபதியைப் பாதுகாப்பதற்காக கொண்டு வரப் படவில்லை
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் முன்மொழியப்பட்ட ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்ற விதி நீதிமன்ற வழக்குகளில் இருந்து ஜனாதிபதியைப் பாதுகாப்பதற்காக கொண்டுவரபடவில்லை என அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்மேலும் படிக்க...
மகாவம்சத்தை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்ற கருத்துக்கு டயனா கமகே கடும் எதிர்ப்பு
மகாவம்சத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரின் கருத்துக்கு, இன்று நாடாளுமன்றில் ஆளும் தரப்பு உறுப்பினரான டயனா கமகே கடும் எதிர்ப்பினை பதிவு செய்திருந்தார். நாடாளுமன்றில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் அன்மையில் தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு நேர்க்காணல் ஒன்றைமேலும் படிக்க...
தீர்வு விடயத்தில் இந்தியாவை அணுகுவதை போலவே மீனவர் பிரச்சினைக்கும் அவர்களிடம் செல்லுங்கள் – சபையில் வாசுதேவ
வடக்கிற்கு தீர்வு வழங்க வேண்டும் என இந்தியாவிடம் கேட்பதை போலவே இந்திய மீனவர்களின் அத்து மீறல் விவகாரம் தொடர்பாகவும் இந்திய அரசை அணுகுமாறு வாசுதேவ நாணயக்கார கடும் தொனியில் கூறினார். நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) உற்பத்தி வரி (சட்டத்தின் கீழான 09மேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதல்களின் உண்மையான சூத்திரதாரி – ஹக்கீம் வெளியிட்ட தகவல்
ஈஸ்டர் தாக்குதல்களின் உண்மையான சூத்திரதாரி வேறு ஒருவர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மேலும் சஹ்ரான் ஹாசிமுக்கும் ஐ.எஸ். அமைப்பிற்கும் இடையில் நேரடி தொடர்புகள் எதுவுமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து விசாரணைகளைமேலும் படிக்க...
மக்கள் ஆணையை புறந்தள்ளி விட முடியாது – கெஹலிய
அரசியல் யாப்பில் 19 ஆவது திருத்தத்தை விரிவாக நீக்குவதற்காக மக்கள் வழங்கியுள்ள ஆணையை புறம் தள்ள அரசாங்கம் தயாரில்லை என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இலங்கை மன்றக் கல்லூரியில் நடை பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்மேலும் படிக்க...
ஆவரங்காலில் வீட்டை உடைத்து நகைகள் கொள்ளை!
ஆவரங்காலில் உள்ள வீடொன்றில் குடியிருப்பாளர்கள் வெளியில் சென்றிருந்தவேளை வீட்டை உடைத்து 22 பவுண் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை ) இடம்பெற்றது என்று அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
சர்ச்சைகளுக்கு மத்தியில் கூடும் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது. இந்த கூட்டம் இன்று முற்பகல் 11 மணியளவில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது. பொதுத் தேர்தலின் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையே கருத்து முரண்பாட்டு நிலைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- …
- 257
- மேலும் படிக்க