இலங்கை
உந்துருளியுடன் மோதிய அதி சொகுசு பேருந்து – ஒருவர் உயிரிழப்பு

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த அதி சொகுசு பேருந்து ஒன்று உந்துருளியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் உந்துருளியில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மதவாச்சி காவல்துறையினர் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் ஏ9 பிரதான வீதியில், மதவாச்சி வஹமல்கொல்லேவ பகுதியில் இன்று புதன்கிழமை (08)மேலும் படிக்க...
HMPV வைரஸ் புதிய வைரஸ் அல்ல – சுகாதாரத்துறை விளக்கம்

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் குறித்து தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், இந்த வைரஸ் புதிய வைரஸ் அல்ல என்றும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ் 20 ஆண்டுகளாக உள்ளதாகவும் சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர்மேலும் படிக்க...
அரசியல் பழி வாங்கல்களுக்கு உள்ளானவர்களுக்கு சட்டத்தரணி அலுவலகம்

அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சட்டத்தரணி அலுவலகம் ஒன்றை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார். பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று (8) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் கருத்துமேலும் படிக்க...
ITAK பாரளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்க தூதுவருடன் சந்திப்பு

இன்று (08) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர் யூலி சங் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இடம்பெற்றது. இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் அரசியல் பொருளாதார சவால்கள் தொடர்பாக இதன்மேலும் படிக்க...
பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசாங்கம் ஏன் இதுவரை நீக்காமலுள்ளது – சஜித்

எதிர்கட்சியில் இருக்கும்போது பயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்த்துவந்த அரசாங்கம் அதனை நீக்குவதற்கு ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கமல் இருக்கிறது என கேட்கிறேம். இந்த சட்டத்தை இரத்துச் செய்வதா அல்லது அதற்கான திருத்தத்தைக் கொண்டு வருவதா என்பது குறித்தான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்மேலும் படிக்க...
வேலைநிறுத்தம் இல்லை – பஸ் சங்கங்கள் தீர்மானம்

Clean Sri Lanka வேலைத்திட்டத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து சோதனை நடவடிக்கைகள் தொடர்பில் இன்று (08) தனியார் பஸ் சங்கங்களுக்கும் பதில் பொலிஸ்மா அதிபருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியடைந்ததாக பஸ் சங்கங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கவிருந்தமேலும் படிக்க...
புதிய கல்விக் கொள்கை 2026இல் அறிமுகம் – பிரதமர்
புதிய கல்விக் கொள்கை 2026ஆம் ஆண்டில் அமுல்படுத்தப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். 2025ஆம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் திட்டமிட்டப்படி செயல்படும் என்றும் 2026ஆம் ஆண்டுமுதல் வழமைபோன்று கல்வி நடவடிக்கைகள்மேலும் படிக்க...
புதிய அரசியலமைப்பு உருவாக்கும் விவகாரம்-தமிழ்த்தேசிய கட்சிகள் கலந்துரையாடல்

புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து பொதுநிலைப்பாடொன்றை எட்டுவது குறித்துக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 25 ஆம் திகதி குறித்த கலந்துரையாடல்மேலும் படிக்க...
வினாத்தாள் கசிந்த விவகாரம் – ஆசிரியர் ஒருவர் பணி இடை நீக்கம்

வடமத்திய மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகளில் தவணைப் பரீட்சைக்கான வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பில் ஆசிரியர் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்தார். 6 மற்றும் 7ஆம் தரங்களுக்கான பரீட்சை வினாத்தாள் கசிந்த விவகாரம்மேலும் படிக்க...
கடவுச்சீட்டுகள் அலுவலகத்தை கிழக்கிலும் ஆரம்பிக்க வேண்டும் ஹிஸ்புல்லா எம்.பி கோரிக்கை

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகம் ஒன்றை கிழக்கு மாகாணத்திலும் உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா சபையில் தெரிவித்தார். கொழும்பு மற்றும் வடக்கு, தெற்கு, மத்திய மாகாணங்களில் கடவுச்சீட்டு அலுவலகம் காணப்படுவதாகவும் ஆனால்,மேலும் படிக்க...
கண்டியில் போலி கச்சேரி சுற்றிவளைப்பு ; மூவர் கைது

கண்டி பிரதேசத்தில் இயங்கி வந்த போலி கச்சேரி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். கண்டி தலைமையக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...
ரோஹிங்கியா ஏதிலிகள் விவகாரம் தொடர்பில் ரிஷாட் எம்.பி ஜனாதிபதிக்கு கடிதம்

இலங்கையில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியா ஏதிலிகள் தொடர்பில் சர்வதேச சட்டத்துக்கு அமைய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அண்மையில் படகு மூலம் இலங்கையில் தஞ்சமடைந்த 102 ரோஹிங்கியா ஏதிலிகள் திருகோணமலைக்கு அழைத்துமேலும் படிக்க...
ஊடகவியலாளர் அமரர் லசந்த விக்ரமதுங்கவின் 16 ஆவது ஆண்டு நினைவு தினம்

கொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் அமரர் லசந்த விக்ரமதுங்கவின் 16 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று 8 ஆம் திகதி புதன்கிழமை காலை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம் பெற்றது. கொலை செயய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவு தூபியில் மட்டக்களப்பு மாவட்டமேலும் படிக்க...
புலமைப்பரிசில் பரீட்சை – விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பமாவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பணிகள் எதிர்வரும் 12 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளன. குறித்த பரீட்சையின் பெறுபேறுகளை 40 நாட்களுக்குள் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தரமேலும் படிக்க...
க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதமொன்றை நடத்த அரசாங்கம் எதிர்பார்ப்பு

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதமொன்றை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில்மேலும் படிக்க...
குரங்குகளின் அதிகரிப்பிற்கு மனிதர்களின் செயற்பாடே காரணம் – சூழலியல் நிபுணர் மெண்டிஸ் விக்ரமசிங்க

நாட்டில் மனிதர்களால் அதிகளவான உணவுகள் சூழலுக்கு விடுவிக்கப்படுகின்றமை குரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பில் தாக்கம் செலுத்தியுள்ளதாக சூழலியல் நிபுணர் மெண்டிஸ் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகமொன்றுக்கு இது தொடர்பில் கருத்துரைத்த அவர், பாரியளவில் உணவு விரயமாவதால் குரங்குகளின் தொல்லை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். உணவுக்மேலும் படிக்க...
பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் ; ஹர்ஷ டி சில்வா

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கத்திடம் உள்ள திட்டம் என்னவென்பதை மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும். வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வெற் வரி எவ்வாறு குறைக்கப்படும், அதனால் ஏற்படும் வருவாய் இழப்பை எவ்வாறு முகாமைத்துவம் செய்வது என்பதை அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- …
- 441
- மேலும் படிக்க



