இலங்கை
சாணக்கியன் உள்ளிட்ட 06 பேர் விடுதலை
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உள்ளிட்ட 06 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இருந்து குறித்த அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணியும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். திலீபனை நினைவுகூறும் முகமாக இலங்கை தமிழரசுக்கட்சிமேலும் படிக்க...
முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம்
சிறுவர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கறுப்புக் கொடி ஏந்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். சிறுவர் தினமான இன்று (வியாழக்கிழமை) காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு அண்மையில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினரின் இணைப்பு அலுவலகத்திற்கு முன்பாகமேலும் படிக்க...
கிளிநொச்சியிலும் வலிந்து காணாமல் ஆக்கப் பட்டவர்களின் உறவுகள் போராட்டம்
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் இன்று கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலை அருகாமையில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்திற்கான அலுவலகம் முன்பாக ஏ9 வீதியில்மேலும் படிக்க...
சிறுவர்கள் முறையாக வழி நடத்தப்படுவதை உறுதிசெய்வது எமது பொறுப்பு – பிரதமர் மஹிந்த
ஒவ்வொரு நாட்டினதும் எதிர்காலம் சிறுவர்களே என்றும் அவர்களை ஆரோக்கியமான செயற்திறன் மிக்கவர்களாக மாற்றுவதற்கும் அவர்கள் முறையாக வழிநடத்தப்படுகின்றார்களா என்பதை உறுதிசெய்வதும் எமது பொறுப்பு என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயேமேலும் படிக்க...
இயற்கை வளங்களை பாதுகாக்கவும் நிர்வகிக்கவும் இலங்கை உறுதி பூண்டுள்ளது – ஐ.நா.வில் ஜனாதிபதி
இயற்கை வளங்களை பாதுகாக்கவும், அதனை முறையாக நிர்வகிக்கவும் இலங்கை அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் நிலையான அபிவிருத்திக்கான பல்லுயிர் தொடர்பான அவசர நடவடிக்கை என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற உச்சி மாநாட்டில் கருத்துமேலும் படிக்க...
தமது காணிகளை விடுவிக்கக்கோரி முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கேப்பாப்பிலவு மக்கள் மகஜர் கையளிப்பு
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி இன்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளித்துள்ளனர். இன்று மாலை மாவட்ட செயலகத்திற்குச்சென்ற இந்த மக்கள் மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்து கலந்துரையாடியதுடன் ஜனாதிபதி, வடமாகாண ஆளுனர் உள்ளிட்டவர்களுக்கான மகஜரினையும் கையளித்துள்ளனர். பலமேலும் படிக்க...
ஈழத்தமிழர்கள் தங்களது உரிமைகளை நிலை நிறுத்த அரசு தடை விதிப்பது மனித உரிமை மீறல் – ஐ.நா.வில் வலியுறுத்து
ஈழத்தமிழர்கள் தங்களது அரசியல் பண்பாட்டு உரிமைகளை நிலைநிறுத்த அரசு தடைவிதிப்பது மனித உரிமை மீறல் என அபிவிருத்தி மற்றும் சமூக வலுப்படுத்தல் அமைப்பின் பிரதிநிதி கெவின் கணபதிபிள்ளை தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மனித உரிமை பேரவை இலங்கையில் பன்னாட்டு பொறுப்புக்கூறல் பொறிமுறையைமேலும் படிக்க...
சஜித்தை நோக்கி கல்வீச்சு தாக்குதல்!- இரத்மலானையில் சம்பவம்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட கூட்டமொன்றில் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இரத்மலானையில் இடம்பெற்ற கூட்டமொன்றில், சஜித் பிரேமதாச உரையாற்றிக்கொண்டிருக்கும்போது அவரை நோக்கி இனந்தொரியாத சிலர் கற்களை வீசியுள்ளனர். இதன்போது சஜித், இந்த கல்வீச்சுமேலும் படிக்க...
சர்வதேசத்தின் மீதான நம்பிக்கையை இழக்கவில்லை- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தில் சர்வதேசம் நீதியை பெற்றுத் தருமென உறுதியாக நம்புவதாக காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். வடக்கு- கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது அமைப்பின் ஊடக சந்திப்பு இன்று (புதன்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது. இதன்போதே அந்தமேலும் படிக்க...
இந்திய கடற்படை உட்பட 34பேர் தனிமைப் படுத்தலில்: மீண்டும் இலங்கையில் கொரோனா பரவலாம்- சவேந்திர சில்வா
மக்களின் கவனயீனத்தால் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு வாய்ப்புள்ளதென கொவிட்-19 தொற்றை ஒழிக்கும் படையணியின் தலைவரான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மேலும், இலங்கைக்கு வந்த இந்தியக் கப்பலில் இருந்த கொவிட்-19 தொற்றாளர்கள் காரணமாக, இதுவரை 34பேர் தனிமைப்படுத்திமேலும் படிக்க...
‘இதய நோயைத் தோற்கடிக்க இதயத்தைப் பயன்படுத்துங்கள்’: உலக இதய நாள் இன்று
உலக இதய தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் நினைவு கூரப்படுகின்றது. இந்த வருடத்தின் உலக இதய தினத்தின் கருப்பொருள், ‘இதய நோயைத் தோற்கடிக்க இதயத்தைப் பயன்படுத்துங்கள்’ என்பதாகும். உலக இதய தினத்தை முன்னிட்டு இலங்கை முழுவதும், பலமேலும் படிக்க...
தற்கொலை தாக்குதல் நடத்துமளவுக்கு முஸ்லிம்களுக்கு எந்த பிரச்சினையும் கிடையாது- முஜிபுர் ரஹ்மான்
தற்கொலை தாக்குதல் நடத்துமளவுக்கு முஸ்லிம்களுக்கு எந்த பிரச்சினையும் நாட்டில் கிடையாதென நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு மேலும் படிக்க...
19 ஆவது திருத்தத்தினால் கீரியும் பாம்பும் போல மைத்திரி -ரணில் முரண்பட்டமையே தாக்குதலுக்கு காரணம்: ஜி.எல்.பீரிஸ்
நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் கீரியும் பாம்பும் போல முரண்பட்டுக் கொண்டதாலேயே ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலை தடுக்க முடியாமல்போனது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்மேலும் படிக்க...
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றி – மாவை சேனாதிராஜா
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றிபெற்றுள்ளது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இப்போராட்டங்களினால் விடுக்கப்பட்ட ஏகோபித்த வேண்டுகோளை அரசு ஏற்க வேண்டும் என்றும் மக்களின் ஜனநாயக உரிமைகளைமேலும் படிக்க...
20 ஆவது திருத்தம் குறித்து மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்புக்கு செல்ல அரசாங்கம் தயார் – நீதி அமைச்சர்
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தில் மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்புக்கு செல்லத் தேவையான எந்த விடயமும் இல்லை என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார். மேலும் அவ்வாறான நிலை ஏற்பட்டால் அதனை மேற்கொள்ளவும் அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். அரசாங்கம் நாடாளுமன்றத்துக்குமேலும் படிக்க...
உரிமையினை விட்டுக் கொடுக்காமல் அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும் – தி.சரவணபவன்
தமிழர்கள் தனித்துவத்தினை இழக்காமல்,தமிழ்தேசியத்தினை சிதைக்காமல், எமது உரிமையினை விட்டுக்கொடுக்காமல் நாங்கள் எங்களது அபிவிருத்திகளை மேற்கொள்ளவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார். சர்வதேச சுற்றுலா தினத்தினை முன்னிட்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் சுற்றுலா தொடர்பான கற்கைகளை மேற்கொள்ளும்மேலும் படிக்க...
வவுனியாவில் கடையடைப்பு: பொலிஸார் கடைகளை திறக்குமாறு அறிவிப்பு
வடக்கு- கிழக்கில் சிறுபான்மையினருக்கு எதிராக அரசினால் முன்னெடுக்கப்படும் அடக்கு முறைக்கு எதிராக, ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெறும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியாவில் தமிழ், இஸ்லாமிய வர்த்தகர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். இந்நிலையில் வவுனியா வர்த்தகர் சங்க தலைவர்மேலும் படிக்க...
20 ஆவது திருத்தச்சட்ட மூலத்தை தோற்கடிப்பதில் ஐக்கிய மக்கள் சக்தி, உறுதியாக இருக்கின்றது- சஜித்
20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதில் ஐக்கிய மக்கள் சக்தி, உறுதியாக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “20 ஐ தோற்கடிப்பதில்மேலும் படிக்க...
த.தே.ம.மு.யில் இருந்து மணிவண்ணன் முற்றாக நீக்கம்- தேசிய அமைப்பாளரானார் சுரேஷ்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து சட்டத்தரணி வி.மணிவண்ணன் முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார். இதேவேளை, கட்சியின் தேசிய அமைப்பாளராக, மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளதுடன், உப செயலாளராக ஞானேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் தேசியமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- …
- 256
- மேலும் படிக்க