இலங்கை
புதிய தலைவர் தெரிவு – ஐ.தே.க.இன் செயற்குழு கூட்டம் இன்று!
ஐக்கியத் தேசியக் கட்சியின் புதிய பிரதி தலைவரை தெரிவு செய்வதற்கான செயற்குழு கூட்டம் இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது. கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று பிற்பகல் 3 மணியளவில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது. ஐக்கிய தேசியக்மேலும் படிக்க...
வவுனியா பிரதேசத்தின் ஒருங்கிணைப்பு குழுகூட்டம் ஆரம்பம்!
வவுனியா பிரதேச செயலகத்தின் ஒருங்கினைப்பு குழு கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் குலசிங்கம் திலீபன் தலைமையில் தற்போது ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இன்றய அமர்வில் பிரதேச செயலர் நா.கமலதாசன், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,காதர் மஸ்தான்,வினோ நோகராதலிங்கம், வவுனியா தெற்கு தமிழ்மேலும் படிக்க...
தற்கொலைக்கு முயற்சி செய்த சிறுமியால் வவுனியா வைத்திய சாலையில் பரபரப்பு
வவுனியா வைத்தியசாலையின் மாடிக்கட்டத்தில் ஏறி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த சிறுமியால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. ஈச்சங்குளம் பகுதியை சேர்ந்த 15 வயதான சிறுமியே இவ்வாறு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தற்கொலை செய்வதற்கு முயற்சித்ததாக வைத்தியசாலை நிர்வாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த சிறுமிமேலும் படிக்க...
பூசா சிறைச்சாலையில் 21 கைதிகள் தொடர்ந்தும் உணவு தவிர்ப்புப் போராட்டம்!
காலி, பூசா சிறைச்சாலையில் 21 கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துவருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், முன்னர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 46 கைதிகளில் 25 பேர் போராட்டத்தினை கைவிட்டுள்ளனர். இதனிடையே, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களில் போதைபொருள்மேலும் படிக்க...
வடமராட்சி மீனவர்கள் நாளை மெளன கவனயீர்பு போராட்டம்
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதனால் மீனவர்களது வாழ்வாதாரம் பாதிப்பு, தொழில் உபகரணங்கள் நாசம், ஆகியவற்றைக் கண்டித்து வடமராட்சி மீனவர்கள் மெளன கவனயீர்பு போராட்டம் ஒன்றை நாளை (திங்கட்கிழமை) முன்னெடுக்கவுள்ளனர். வட.மராட்சிக் கடற்ப்பரப்பில் கடந்த சில தினங்களாக இந்தியமேலும் படிக்க...
கிழக்கைச் சேர்ந்தவரே தமிழரசுக் கட்சியின் புதிய செயலாளராக நியமிக்கப் பட வேண்டும் -சி.வி.கே
தமிழரசுக் கட்சியின் புதிய செயலாளர் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்பவராகவே அமையவேண்டும் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவரும் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஒருவரை நியமிப்பதே பொருத்தமானதாக அமையும் எனமேலும் படிக்க...
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு என்று சட்டத்தரணிகள் அணி உருவாக்கம்
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனின் ஏற்பாட்டில் சட்டத்தரணிகள் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் தனியார் விடுதியில் குறித்த சந்திப்பு நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. அதில் கலந்து கொண்ட சட்டத்தரணிகள், மணிவண்ணனுடன் தொடர்ந்தும் இணைந்து பயணிப்பதற்கு தமது முழுமையானமேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் இருந்து ரணிலும் மைத்திரியும் தப்பிக்க முடியாது- ராஜித
நாட்டில் நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் பொறுப்பிலிருந்து மைத்திரியும் ரணிலும் ஒருபோதும் தப்பிக்க முடியாதென முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ராஜித சேனாரத்ன, நேற்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் சாட்சியமொன்றை வழங்குவதற்காகமேலும் படிக்க...
இலங்கை பணிப்பெண் சித்திரவதை செய்யப்பட்டு கொலை- குவைத்தில் சம்பவம்
குவைத்தில் இலங்கை பணிப்பெண்ணொருவர் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டில் செயற்படும் ‘கல்ப் நியூஸ்’ தெரிவித்துள்ளது. ‘கல்ப் நியூஸ்’ இந்த சம்பவம் தொடர்பாக மேலும் கூறியுள்ளதாவது, எரிகாயங்கள் உட்பட பல காயங்களுடன் அமரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இலங்கை பணிப்பெண் உயிரிழந்துள்ளார். குறித்த பணிப்பெண்ணிற்குமேலும் படிக்க...
ரணிலின் ஊழல் ஒழிப்பு செயலகத்தில் பாரிய ஊழல் – 3 வருடங்களில் 33 மில்லியன் செலவு அம்பலம்?
ஊழல் குறித்து ஆராய நல்லாட்சி அரசின் அமைச்சரவையின் ஒப்புதலுடன் அமைக்கப்பட்ட ஊழல் ஒழிப்பு குழு செயலகம் 29 மாதங்களாக பெரிய அளவிலான ஊழல்களைச் செய்து 33,714,807.59 மில்லியன் ரூபாய் பணத்தை செலவு செய்துள்ளமை தற்போது அம்பலமாகியுள்ளது. அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும்மேலும் படிக்க...
பொலிஸாருக்கு தகவல் வழங்கும் மக்களுக்கான சன்மானத் தொகை அதிகரிப்பு.
சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளுடன் சந்தேகநபர்களை கைதுசெய்யும் பொலிஸாருக்கும் இவை குறித்து தகவல்களை வழங்கும் பொது மக்களுக்கும் வழங்கும் சன்மானத் தொகையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலிஸ் தலைமையகத்தினால் இன்று (வெள்ளிக்கிழமை) அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், “ரி-56 ரகமேலும் படிக்க...
விக்னேஸ்வரனின் கருத்து ஒட்டுமொத்த தமிழர்களின் கருத்தல்ல- சரத் வீரசேகர
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிடும் கருத்துக்களை இலங்கை வாழ் தமிழ் மக்களின் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது என இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, பயனற்ற விதத்தில் உள்ள மாகாண சபைத் தேர்தலால் எவ்விதமேலும் படிக்க...
அரசியல் அமைப்பின் 20ஆவது திருத்த வரைபை ஆராய சிறப்புக் குழு நியமனம்!
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்காக முன்மொழியப்பட்ட வரைபை ஆராய இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சிறப்புக் குழுவொன்றினை நியமித்துள்ளது. சிரேஷ்ட உறுப்பினர்கள் அடங்கிய இந்தக் குழு நிஹால் ஜெயமன்ன தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் இக்ராம் மொஹமட், எம்.எம்.சுஹைர், எல்.எம்.கே.அருளானந்தம், பிரசாந்த லால் டிஅல்விஸ்,மேலும் படிக்க...
எதிர்கால திட்டங்களை வடிவமைத்து கோப்பு வடிவில் வைத்திருப்பதில் எந்த விதமான அர்த்தமும் இல்லை – ஜனாதிபதி
எதிர்கால திட்டங்களை வடிவமைத்து கோப்பு வடிவில் வைத்திருப்பதில் எந்தவிதமான அர்த்தமும் இல்லையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவ்வாறு வடிவமைக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த வேண்டும் எனவும் அவற்றை செயற்படுத்துவதே இராஜாங்க அமைச்சர்களின் பொறுப்பு எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மற்றும் இராஜாங்கமேலும் படிக்க...
பயங்கரவாதத்தை ஒழிக்க ஆறுமுகம் தொண்டமான் ஆதரவளித்தார்- மஹிந்த
நாட்டை பிரிக்கும் சக்திகளுக்கு எதிராக செயற்பட்ட ஆறுமுகம் தொண்டமான், அனைத்து சந்தர்ப்பங்களிலும் பயங்கரவாதத்தை ஒழிக்க அரசாங்கத்திற்கு ஆதரவளித்தார் எனபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் தொடர்பான அனுதாபப் பிரேரணைமேலும் படிக்க...
பதவியை இராஜினாமா செய்தார் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர்!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தன் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், சுயவிருப்புடனும் தனது பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அந்த வகையில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்மேலும் படிக்க...
சமூக மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே தற்கொலைகளை தடுக்க முடியும் – யமுனா நந்தா
சமூக மட்டத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதன் மூலமே வடபகுதியில் தற்கொலைகளை தடுக்க முடியும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி. யமுனா நந்தா தெரிவித்தார் உலக தற்கொலை தடுப்பு தினம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
20 ஆவது திருத்தத்தின் உள்ளடக்கங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் அவசியம் – முன்னாள் சபாநாயகர்
அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தின் உள்ளடக்கங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் அவசியம் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் மீது இன்னமும் கவனம் குவிக்கப்படாதமேலும் படிக்க...
20 ஆவது திருத்தத்தின் சில ஏற்பாடுகள் மூலம் நீதிமன்ற சுயாதீனத்துக்கு அழுத்தம் ஏற்படலாம் – சாலிய பீரிஸ்
20 ஆவது திருத்தத்தின் சில ஏற்பாடுகள் மூலம், நீதிமன்ற சுயாதீனம், சட்டத்தரணி தொழிலுக்கு அழுத்தம் ஏற்படக்கூடும் என சுட்டிக்காட்டி, ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். உயர் நீதிமன்றமேலும் படிக்க...
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 147 ஆக அதிகரிப்பு
இலங்கையில் மேலும் ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 147 ஆக அதிகரித்துள்ளது. சவுதி அரேபியாவிலிருந்து நாட்டிற்கு வருகை தந்த 5 பேருக்கே இவ்வாறு கொரோனா தொற்றுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- …
- 256
- மேலும் படிக்க