இலங்கை
நாட்டில் மேலும் நூற்றுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!
நாட்டில் மேலும் 137 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்களில் 38 பேர் தனிமைப்படுத்தப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்கள் எனவும் ஏனைய99 பேரும் மினுவங்கொட, பேலியகொட மீன் சந்தை மற்றும் மீன்பிடித்மேலும் படிக்க...
கொரோனா தொற்றாளர்களுடன் பேருந்தில் யாழிற்கு பயணித்த ஆறுபேர் தலைமறைவு!
யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கொழும்பில் உணவகம் நடத்தும் உரிமையாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில், அவருடன் பேருந்தில் பயணித்தவர்களில் 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஆறு பேர் தொலைபேசியை நிறுத்திவைத்து தலைமறைவாகியுள்ளதாக வடக்கு மாகாணமேலும் படிக்க...
தற்போது பரவும் கொரோனா வைரஸ் முன்னரை விட வீரியமானது
நாட்டில் தற்போது பரவும் கொரோனா வைரஸ், முன்னர் பரவியதை விட வித்தியாசமானதென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய கொரோனா வைரஸ் வீரியமானது என்பதால், தொற்று பரவலின் வேகம் அதிகரிக்குமெனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மினுவாங்கொடை, திவுலப்பிட்டிய, பேலியகொடை மீன்மேலும் படிக்க...
பல்கலைக் கழகங்களுக்கு 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அனுமதி
இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 41 ஆயிரத்து 500 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை புதிதாக 10 ஆயிரம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு நுழைய தகுதி பெற்றுள்ளனர் என ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத்மேலும் படிக்க...
யாழிற்கு வருவோர் கட்டாய சுயதனிமைப் படுத்தப்படுவர் – மாநகர முதல்வர்
யாழ்ப்பாண நகரத்திற்கு வெளி மாவட்டத்தில் இருந்து வரும் அனைவரும் இந்த நிமிடத்திலிருந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப் படுவார்கள் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் அறிவித்துள்ளார் யாழ்ப்பாண நகரப் பகுதியில் இன்று (சனிக்கிழமை) நான்கு கடைகள் சீல் வைக்கப்பட்டு குறித்தமேலும் படிக்க...
சுதந்திரக் கட்சி மற்றும் முஸ்லிம் எம்.பி.க்களின் ஆதரவு முக்கியமானது – துமிந்த திசாநாயக்க
சுதந்திரக் கட்சி மற்றும் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல், நாடாளுமன்றத்தில் 20 வது திருத்தத்தை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கம் பெற்றிருக்காது என இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். வடமேல் மாகாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசியமேலும் படிக்க...
1990 ஆம் ஆண்டு யாழிலிருந்து வெளியேற்றப் பட்டதை நினைவுகூர்ந்த முஸ்லிம் மக்கள்!
தமிழீழ விடுதலைப் புலிகளினால் 1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதன் 30 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (30) யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது. சுமார் 3 பேர், மிகவும் அமைதியான முறையில் நினைவு தினத்தைமேலும் படிக்க...
யாழ் 750 வழித்தட சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் பேருந்து சேவை இடைநிறுத்தம்!
பருத்தித்துறை – யாழ்ப்பாணம் 750 வழித்தட சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் பேருந்துகளும் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலில் இடைநிறுத்தப்பட்டுள்ளன. 750 இலக்க வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து சேவையில் கரவெட்டி ராஜ கிராமத்தைச் சேர்ந்தவர்களே பெருமளவில் சாரதிகள், நடத்துனர்களாகப் பணியாற்றும்மேலும் படிக்க...
மைக் பொம்பியோவின் கருத்திற்கு பதிலளித்தார் சவேந்திர சில்வா
அமெரிக்க இராஜாங்கச்செயலாளர் மைக் பொம்பியோ இலங்கையில் வைத்து விடுத்த அறிவிப்பு நடைமுறைக்குவரும் என நம்புவதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க இராஜாங்கச்செயலாளர் கடந்த 28ஆம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்றார். இதன்போதுமேலும் படிக்க...
அடுத்த வாரம் பாராளுமன்ற அலுவல்கள் ஒரு தினத்திற்கு மட்டுப் படுத்தப்படும்
2020 ஆம் நிதியாண்டுக்குரிய சேவை செலவினங்களுக்காக நிதி அமைச்சர் சமர்ப்பித்த நிதி ஒதுக்கீட்டுப் பிரேரணையை அடுத்த மாதம் 12 ஆம் திகதி நிறைவேற்றுவதென பாராளுமன்ற அலுவல்களுக்கான தெரிவுக்குழு நேற்று தீர்மானித்துள்ளது. இந்தக் குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது.மேலும் படிக்க...
பொது மக்கள் சேவை தொடரும் – ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காணப்பட்டாலும் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் பொது மக்கள் சேவை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஜனாதிபதி செயலகம், கொரோனா தொற்றால் ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பாகமேலும் படிக்க...
பிள்ளையான் கட்சியினரின் செயற்பாட்டால் மக்கள் கடுமையாக பாதிப்பு- சாணக்கியன்
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் சுயநலத்துடன் செயற்பட்டு வருகின்றமை காரணமாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இரா.சாணக்கியன்மேலும் படிக்க...
நாட்டின் நலன்களைப் பொருட் படுத்தாமல் உலக வல்லரசுகளுடன் அரசாங்கம் நெருக்கமாக செயற் படுகின்றது – ஜே.வி.பி.
நாட்டின் நலன்களைப் பொருட்படுத்தாமல் அரசாங்கம் உலக வல்லரசுகளுடன் நெருக்கமாக செயற்பட்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீடுக்கு எதிர்ப்பினை வெளியிட்டு கொழும்பில் போராட்டம் நடத்தியதாகவும் அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
கொரோனா தனிமைப்படுத்தல் முகாமால் ஆபத்து – கோப்பாய் மக்கள் சுகாதார அமைச்சுக்கு கடிதம்!
கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமால் ஆபத்து என கோப்பாய் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சுக்கு அப்பகுதி மக்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அத்தோடு, கடிதத்தின் பிரதிகள் சுகாதார சேவைகள்மேலும் படிக்க...
சமூக தொற்று ஏற்படும் விளிம்பில் இலங்கை – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை
கொரோனா தொற்றின் அண்மைய அதிகரிப்பு தொற்று உறுதியான நோயாளிக்கு சிக்கல்களை ஏற்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மினுவாங்கொடை கொத்தணி 6 அல்லது 8 வாரங்கள் தொடர்ந்து இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் சுகாதார சேவைகளின் பதில் சுகாதாரமேலும் படிக்க...
இலங்கையில் உள்ள 64 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்
இலங்கையில் உள்ள 64 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய கொழும்பு மாவட்டத்தின் 15 பொலிஸ் பிரிவுகளிலும் கம்பஹா மாவட்டத்திலும் குளியாப்பிட்டியில் 5 பொலிஸ் பிரிவுகளிலும் களுத்துறை மாவட்டத்தின் 3 பொலிஸ் பிரிவுகளிலும் வெல்லம்பிட்டி, கொத்தட்டுவ, முல்லேரியா மற்றும்மேலும் படிக்க...
பிரதமரின் விஜயதசமி வாழ்த்துச் செய்தி
அன்னை அம்பிகையின் அருள் வேண்டி அனுஷ்டிக்கப்படும் நவராத்திரி விரதத்தின் நிறைவில் விஜயதசமியையும் பக்தியோடு அனுஷ்டிக்கும் என் அன்பிற்குரிய இலங்கைவாழ் இந்து மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த விஜயதசமி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனித சமுதாயத்திற்கு அடிப்படைத் தேவைகளாக இருக்கின்ற வீரம்,மேலும் படிக்க...
மைக் பொம்பியோ எதிர்வரும் 27 மற்றும் 28 இல் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின்பேரில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். மைக் பொம்பியோவின் வருகையின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து நாட்டின் தலைவர்களுடன் அதிகாரப்பூர்வமேலும் படிக்க...
கிளிநொச்சியில் உயர்தரம் கற்கும் மாணவன் சடலமாக கண்டெடுப்பு!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் பகுதியிலிருந்து மாணவன் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவன், கட்டைக்காடு பகுதியிலிருந்து திருமண நிகழ்வொன்றுக்காக தருமபுரத்திற்கு நேற்று சென்றிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த திருமண நிகழ்வுக்குச் சென்று, அன்றிரவு முழுவதும் வீடு திரும்பாததால் மாணவனைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- …
- 257
- மேலும் படிக்க