Main Menu

பொது மக்கள் சேவை தொடரும் – ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காணப்பட்டாலும் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் பொது மக்கள் சேவை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஜனாதிபதி செயலகம், கொரோனா தொற்றால் ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பாக சிந்தித்து தொலைபேசி, தபால் மற்றும் இணைய வழி மூலமாக பொது மக்களுக்கு சேவைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்படி ஜனாதிபதி செயலகத்தின் பொது மக்கள் சேவை பிரிவை 0114-354550, 0112-354550 ஆகிய தொலைபேசி இலங்கங்களின் மூலம் தொடர்புக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 0112-338073 என்ற இலக்கத்தின் ஊடாக ஒம்புட்ஸ் மென் அலுவலகத்தை தொடர்பு கொள்ள முடியும் என கேட்கப்பட்டுள்ளது.

அதேபோல் 0112-354354 என்ற இலக்கத்தின் மூலம் ஜனாதிபதி நிதியத்தை தொடர்புக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது

பகிரவும்...