Author: trttamilolli
ஆங்கில புதுவருடம் : தலைவர்களின் வாழ்த்து செய்தி!
நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பை 2021ம் ஆண்டு கொண்டு வரட்டும் என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தவண்ணம் உள்ளனர். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,மேலும் படிக்க...
புதுவருட கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது!
2021ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. தொடர்ந்து மங்கள விளக்கேற்றல், 2 நிமிட மௌன அஞ்சலி மற்றும்மேலும் படிக்க...
மலையகத்திலும் புதுவருட கொண்டாட்ட நிகழ்வுகள்
உலகெங்கிலும் இன்று (வெள்ளிக்கிழமை) ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் கொண்டாடங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் மலையகத்திலும் புதுவருட கொண்டாட்டங்களும் வாண வேடிக்கைகளும் இடம்பெற்றன. புத்தாண்டை முன்னிட்டு ஹற்றன் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலயத்தில் குருக்கள் பிரம்மஸ்ரீ பூர்ணா.சந்திரானந்த தலைமையில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. காலைமேலும் படிக்க...
புத்தாண்டை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு!
புத்தாண்டையொட்டி தமிழகத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. உலகப் புகழ்பெற்ற வேளாங்கன்னி பேராலயத்தில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இதையொட்டி, வேளாங்கன்னி நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டது. பேராலய தலைவர் பிரபாகர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில்மேலும் படிக்க...
கருக்கலைப்பை சட்ட பூர்வமாக்கிய மிகப்பெரிய லத்தீன் அமெரிக்க நாடாக மாறியது அர்ஜென்டினா!
அர்ஜென்டினா கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கிய மிகப்பெரிய லத்தீன் அமெரிக்க நாடாக மாறியுள்ளது. நேற்று (புதன்கிழமை) அதிகாலை 4 மணிக்குப் பிறகு இதன் முடிவு அறிவிக்கப்பட்டதால், ப்யூனோஸ் அயர்ஸின் நியோகிளாசிக்கல் காங்கிரஸின் அரண்மனைக்கு வெளியே விழிப்புடன் இருந்த உற்சாகமான சார்பு தேர்வு பிரச்சாரகர்கள் கொண்டாட்டத்தில்மேலும் படிக்க...
யேமன் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு – 26 பேர் வரையில் உயிரிழப்பு
யேமன் நாட்டின் ஏடன் விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. யேமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப்படையினருக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நடைபெற்று வருகிறது. அரசுப்படையினருக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவுமேலும் படிக்க...
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை
2020ம் ஆண்டு இன்றுடன் முடிவடைந்து நள்ளிரவில் புத்தாண்டு பிறக்கிறது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் பொது இடங்கள், விடுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு பிறப்பையொட்டி கிறித்தவ தேவாலயங்களில் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்போர்மேலும் படிக்க...
இன்று ரஜினிகாந்தை சந்தித்து நலம் விசாரிக்கிறார் கமல்
சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஆதரவு தரும்படி நடிகர் ரஜினிகாந்திடம் கமல்ஹாசன் கேட்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மூன்றாம் கட்டத் தேர்தல் பிரச்சாரத்தை முடித்து விட்டு இன்று(வியாழக்கிழமை) நண்பகல் விமானம் மூலம் சென்னைமேலும் படிக்க...
கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்களுக்கும், மாவைக்கும் இடையில் சந்திப்பு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்களுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்றையதினம்(வியாழக்கிழமை) இடம்பெற்றது. குறித்த சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த சந்திப்பில் வடக்கு மாகாணமேலும் படிக்க...
உங்களின் தன்னிச்சையான செயற்பாட்டினால் யாழ். மாநகர சபையை இழந்துள்ளோம் – மாவையை சாடும் சுமந்திரன்
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் தன்னிச்சையான, ஜனநாயக விரோத மற்றும் சட்டவிரோத செயற்பாட்டினால் போட்டியின்றி வென்றிருக்க வேண்டிய யாழ். மாநகர சபை முதல்வர் பதவியை இழந்திருக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக இலங்கைத்மேலும் படிக்க...
தமிழ் விவசாயிகள் மோசமாக பந்தாடப் படுகின்றார்கள் – கஜேந்திரன் விசனம்
இந்த அரசாங்கமானது சிங்கள மக்களின் பொருளாதாரத்தை வளர்க்கும் செயற்பாட்டினை முன்னெடுப்பதுடன் தமிழ் விவசாயிகள் மோசமாக பந்தாடப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் தெரிவித்துள்ளார். தமது காணிகளை வன வளத்திணைக்களத்திடமிருந்து மீட்டுத்தருமாறு ஆசிக்குளம் கிராம மக்கள் வவுனியா மாவட்ட மனித உரிமை ஆணைக்குழுவில்மேலும் படிக்க...
வூஹான் நகரில், அவசரகால தடுப்பூசி வழங்கும் பணி ஆரம்பம்!
சீனாவின் வூஹான் நகரில், அவசரகால தடுப்பூசி வழங்கும் பணி ஆரம்பமாகியுள்ளது. ஹுபெய் மாகாண தலைநகரான வூஹானில், கடந்தாண்டு, டிசம்பர், 31ஆம் திகதி முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, 1.10 கோடி மக்கள் தொகை கொண்ட வூஹான் நகரில், ஜனவரி மாதம்மேலும் படிக்க...
30 வருடம் சிறையில் கழித்த இஸ்ரேல் உளவாளிக்கு பெரும் வரவேற்பு
அமெரிக்காவின் முன்னாள் கடற்படை ஆய்வாளர் 30 வருட சிறைவாசத்தினை முடித்து மீண்டும் இஸ்ரேல் திரும்பியுள்ளார். இஸ்ரேலின் உளவாளியாக செயற்பட்ட குற்றத்திற்காக அமெரிக்காவினால் சிறைப்பிடிக்கப்பட்ட 66 வயதான ஜொனாத்தன் பொலார்ட் (Jonathan Pollard), ஏறக்குறைய 30 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்மேலும் படிக்க...
கமலா ஹாரீஸிற்கு கொரோனா தடுப்பூசி!
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள கமலா ஹாரிஸ், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். அவருக்கு மாடர்னா தடுப்பூசி செலுத்தப்பட்டது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. வொஷிங்டனில் உள்ள யுனிடெட் மெடிக்கல் சென்டரில் முதல் டோசை போட்டுக் கொண்டார். அதேபோன்று கமலாவின் கணவரும் மாடர்னா மருந்தை போட்டுக்கொண்டார்.மேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசியைச் செலுத்த தயாராகும் இந்தியா – ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும்!
குஜராத் உள்ளிட்ட 4 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதற்கான ஒத்திகை வெற்றி அடைந்துள்ளது. இதையடுத்து கொரோனா தடுப்பூசி போடும் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு இந்திய மத்திய அரசு தயாராகிறது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தடுப்பூசியைமேலும் படிக்க...
வலுவான எதிர்க்கட்சிகள் இல்லாமையே நாங்கள் வீதிகளில் இறங்கக் காரணம் – விவசாயிகள் குற்றச்சாட்டு
நாட்டில் வலுவான எதிர்க்கட்சிகள் இல்லாததால் விவசாயிகள் வீதிகளில் அமர்ந்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக டெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல விவசாயிகள் வீதிகளில் கூடாரம் அமைத்து தொடர்ந்தும் போராடி வருவதால் பலரதுமேலும் படிக்க...
நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக மயூரன் தெரிவு
நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த பத்மநாதன் மயூரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில்மேலும் படிக்க...
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவிலும் இன்று (புதன்கிழமை) காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேச நீதியைப் பெற்றுத்தருமாறுக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. அத்தோடு, மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஜெனீவா கூட்டத்தொடரில் காணாமலாக்கப்பட்டோரின் விடயத்தில் கரிசனை கொள்ளப்படவேண்டும் என்ற கோரிக்கையையும்மேலும் படிக்க...
கிளிநொச்சி மற்றும் மன்னாரிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் இன்று (புதன்கிழமை) போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று காலை 11.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க அலுவலகம் முன்பாகமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 299
- 300
- 301
- 302
- 303
- 304
- 305
- …
- 828
- மேலும் படிக்க