Main Menu

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவிலும் இன்று (புதன்கிழமை) காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேச நீதியைப் பெற்றுத்தருமாறுக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அத்தோடு, மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஜெனீவா கூட்டத்தொடரில் காணாமலாக்கப்பட்டோரின் விடயத்தில் கரிசனை கொள்ளப்படவேண்டும் என்ற கோரிக்கையையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்வைத்தனர்.

கையளிக்கப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்கள் எங்கே?, தமிழ் குழந்தைகள் என்ன பயங்கரவாதிகளா? போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பகிரவும்...