Main Menu

புதுவருட கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது!

2021ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.

தொடர்ந்து மங்கள விளக்கேற்றல், 2 நிமிட மௌன அஞ்சலி மற்றும் சத்தியப்பிரமாணம் என்பன இடம்பெற்றிருந்தது.

நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் சிறப்புரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...